நடிகர் அரவிந்த் சாமி எப்படி பட்ட நடிகர் என்பது நமக்கு தெரியும்.1991 இல் சூப்பர் ஸ்டாரின் தளபதி படத்தில் நடித்த அரவிந்த் சாமி அதன் பின்னர் சாக்லேட் பாய் என்று அனைத்து பெண்களின் மனதில் இடம் பிடித்தார்.தற்போது 48 வயதாகும் அரவிந்த் சாமி இந்த காலகட்டத்திலும் பல ஹீரோக்களுக்கு சவால் விடும் வகையில் மிகவும் ஸ்மார்ட்டாக இருக்கிறார்.
தற்போது இந்த ஆண்டில் தமிழில் 4 படங்களில் நடித்துள்ள அரவிந்த் சாமி தற்போது நரகசூரன்,செக்க செவந்த வானம் என்ற படங்களில் நடித்து வந்தார்.ஆனால் இத்தனை நாட்கள் ஸ்ட்ரைக் காரணமாக ஷூட்டிங் நிறுத்தப் பட்டதால் தனது பிள்ளைகளுடன் நேரத்தை செலவழித்து வந்தார்.
அரவிந்த் சாமிக்கு இரண்டு மனைவிகள் இருக்கின்றனர் அதில் முதல் மனைவியை 2010 ஆம் ஆண்டு விவாகரத்து செய்துவிட்டு இரண்டாம் மனைவியுடன் வாழ்ந்து வருகிறார். இருப்பினும் முதல் மனைவிக்கு பிறந்த இரண்டு பிள்ளைகளான ஆதிரா மற்றும் ருத்திரா அகியோர்களை தன்னுடனே வைத்துக்கொண்டுள்ளார்.சமீபத்தில் இவரது இளைய மகளான ருத்ரா தனது தந்தைக்காக கேக் ஒன்றை செய்து கொடுத்துள்ளார்.அந்த கேக் புகைபடத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட அரவிந்த் சாமி தனது மகளின் திறமையை கண்டு பெருமைபட்டுள்ளார்.