நடிகை மஞ்சு வாரியர் அவர்கள் மலையாள திரைப்பட உலகில் மிகப் பிரபலமான நடிகையாவார். நடிகை மஞ்சு வாரியர் முதலில் சில விளம்பரப் படங்களில் தான் நடித்து வந்தார். மலையாளத்தில் 1995 ஆம் ஆண்டு வெளியான ‘சாக்ஷியம்’ என்ற படத்தின் மூலம் மஞ்சு வாரியர் அறிமுகமானார். அதன் பின்னர் மலையாளத்தில் பல்வேறு படங்களில் நடித்து வந்தார். மேலும், ஒரு சில சீரியல்களில் கூட இவர் நடித்து உள்ளார். அதுமட்டும் இல்லாமல் மலையாள திரையுலகம் இவரை ‘லேடி சூப்பர் ஸ்டார்’ என்று தான் அழைப்பார்கள். சமீபத்தில் வெற்றி மாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான ‘அசுரன் ‘ திரைப்படம் அமோக வெற்றி பெற்றது. இந்த படத்தில் தனுசுக்கு ஜோடியாக நடித்து தமிழ் ரசிகர்கள் கவனத்தை தன் பக்கம் ஈர்த்தவர் மலையாள நடிகை மஞ்சு வாரியார். இதனை தொடர்ந்து அசுரன் படம் பெரிய அளவில் வெற்றி பெற்றதால் நடிகை மஞ்சு வாரியருக்கு தமிழில் பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளன.

Advertisement

கேரளாவில் நடந்த படப்பிடிப்பில் நடிகையை பார்த்து தன் தாயை மறந்து பிரம்மித்துப் போய் நின்ற வாலிபர். இதனால் பல மணி நேரம் சாலையில் பரிதவித்த தாயார். இந்த சம்பவம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியது. கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டத்தில் மலையின் கீழே உள்ள விளவூர்க்கல் பகுதியை சேர்ந்தவர் 28 வயது இளைஞர். இவருக்கு 66 வயதில் தாயார் ஒருவர் உள்ளார். மேலும், தன் தாயார் ஓய்வூதியம் வாங்குவதற்காக மலையின் கீழ் உள்ள அலுவலகத்திற்கு தன் தாயாருடன் சென்று உள்ளார். அந்த இளைஞர் தாயாரை அலுவலகத்தில் அமர வைத்து விட்டு தன் நண்பர்களுடன் பேசிக் கொண்டு இருந்தார். அப்போது அருகில் உள்ள கோவிலில் நடிகை மஞ்சு வாரியரின் படப்பிடிப்பு நடந்து கொண்டு இருந்தது. அதுமட்டும் இல்லாமல் அந்த இளைஞர் நடிகை மஞ்சு வாரியரின் தீவிர ரசிகர்.

மேலும், இந்த இளைஞன் படப்பிடிப்பு நடைபெறும் இடத்திற்கு சென்று உள்ளார். நடிகையை பார்த்த குஷியில் அந்த இளைஞர் தாயை மறந்து படப்பிடிப்பு தளத்திலேயே நின்று விட்டார். ஓய்வூதியத்தை வாங்கி வெளியே வந்தார் தாயார் மகனை தேடி உள்ளார். பின் மகன் வருவான் என பல மணி நேரம் காத்திருந்தார். நீண்ட நேரமாகியும் அவர் வரவில்லை. வெகு நேரம் அலுவலகத்திற்கு வெளியே பரி தவிப்பில் இருந்ததார். அதோடு அவருக்கு வீட்டுக்கு செல்ல வழி தெரியவில்லை. அதனால் அங்கும் இங்கும் அலைந்து கொண்டிருந்தார். பல மணி நேரம் கடந்தும் அவரால் வீட்டை கண்டுபிடிக்கவில்லை. தன் மகனையும் கண்டுபிடிக்கவில்லை. ஒரு கட்டத்தில் நடு ரோட்டிலேயே புலம்பி அழுது கொண்டிருந்தார். அதை பார்த்த அந்த பகுதி மக்கள் போலீசாருக்கு புகார் அளித்தார்கள்.

Advertisement

Advertisement

பின் அவர்கள் மலையின் கீழ் உள்ள போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அந்த வயதான தாயாரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று அவரிடம் இருந்த ஆவணங்களை சோதித்து பார்த்த பிறகு அவன் மகன் செல்போன் நம்பர் கிடைத்தது. அந்த நம்பரை தொடர்பு கொண்டு அந்த இளைனரிடம் பேசினார்கள். அப்போது தான் தெரிந்தது அவன் நடிகையைப் பார்த்த மகிழ்ச்சியில் தாயை மறந்தது: பின் நடந்த நிகழ்வுகளை போலீசார் அந்த இளைஞனிடம் கூறி உள்ளார்கள். இதையடுத்து காவல் நிலையத்துக்கு விரைந்து சென்றார் அந்த இளைஞர். மேலும், போலீசார் அந்த இளைஞரை கண்டித்து தாயாரை அவனிடம் ஒப்படைத்து உள்ளார். இந்த சம்பவம் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் பயங்கர பரபரப்பை ஏற்படுத்தியது. நடிகைகளுக்காக இப்படி பெற்ற தாயை நடுத்தெருவில் விட்டு விடுவதா என்ன கொடும ?? என்று பலரும் விமர்சித்து வருகின்றனர்.

Advertisement