தமிழ் சினிமாவில் கவர்ச்சி நடிகையாக திகழ்ந்து இருந்தவர் சோனா. தமிழில் 2001 ஆம் ஆண்டு அஜித் நடிப்பில் வெளிவந்த பூவெல்லாம் உன் வாசம் என்ற படத்தில் துணை கதாபாத்திரத்தில் நடித்து சினிமாவில் அறிமுகமானவர் நடிகை சோனா.அதன் பின்னர் இவர் ஷாஜகான், வில்லன் போன்ற பல படங்களில் துணை கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். பின் இவர் சில காலம் கவர்ச்சி நடிகையாக வலம் வந்தார். மேலும், இவர் தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு ஆகிய மொழிகளில் நடித்து இருக்கிறார்.

அதிலும் இவர் வடிவேலு, விவேக் போன்ற பல நகைச்சுவை நடிகர்களுடன் இணைந்து படங்களில் நடித்திருக்கிறார். அது மட்டும் இல்லாமல் நடிகை சோனா அவர்கள் வெங்கட் பிரபுவின் உதவியாளர் இயக்கிய கனிமொழி என்ற திரைப்படத்தின் மூலம் தயாரிப்பாளர் ஆனார்.அந்த படம் எதிர்பார்த்தளவிற்கு வெற்றியடைவில்லை. இதனால் சோனாவிற்கு மிகப்பெரிய அளவில் நஷ்டம் தான் ஏற்பட்டது. அதற்குப் பிறகு சோனா படங்களை தயாரிக்காமல் நடித்து மட்டும் வந்தார்.

Advertisement

சோனா திரைப் பயணம் :

இடையில் சில ஆண்டுகள் இவர் டங்களிலிருந்தும் விலகி இருந்தார். மேலும், சிறிய இடைவெளிக்கு பிறகு இவர் கலர்ஸ். தமிழில் ஒளிபரப்பாகி இருந்த அபி டெய்லர் என்ற சீரியலில் வில்லியாக நடித்திருந்தார். அதனை அடுத்து ஜீ தமிழில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் மாரி என்ற சீரியலும் வில்லியாக நடித்திருந்தார்.ஆனால், திடீரென்று அந்த சீரியலில் இருந்து சில பிரச்சனையின் காரணமாக சோனா விலகிவிட்டார்.

ஸ்மோக் படம்:

இந்த நிலையில் தற்போது சோனா ஸ்மோக் என்ற வெப் தொடரில் நடித்திருக்கிறார். இந்த தொடரை சோனாவே எழுதி இயக்கி இருக்கிறார். சொல்லப்போனால், இந்த தொடரின் மூலம் இவர் இயக்குனராகவும் அறிமுகமாக இருக்கிறார். இவர் தன்னுடைய வாழ்வில் நடந்த பல சம்பவங்களை கதையாக எழுதி இந்த வெப் தொடரை இயக்கி வருகிறார். அதில் ஸ்மோக் சீசன் 1 விரைவில் படப்பிடிப்பு நிறைவடைய உள்ளது.

Advertisement

வெங்கட் பிரபு சோனா சர்ச்சை

படத்தில் தன்னை பற்றிய 99% உண்மைகளை சொல்லபோவதாக அவர் கூறியுள்ளார். இதற்க்கு முன்பு இயக்குனர் வெங்கட் பிரபு மீதும் அவர் தென்னிந்திய நடிகர் சங்கத்தில் புகார் ஒன்றையும் அவர் அளித்து இருந்தார். அதில் அவர் கோவா திரைப்படத்திற்கு பிறகு என்னை வைத்து திரைப்படம் எடுப்பதாக கூறி 1.50 கோடி அவர் என்னிடம் இருந்து வாங்கி இருந்தார் என்றும் அவர் புகார் அளித்து இருந்தார்.அதன் பின் அவர் என்னை வைத்து படம் எடுக்கவில்லை. நான் நான்கு ஆண்டுகளாக பணத்தை திருப்பி கேட்டு வருகிறேன்.

Advertisement

சர்ச்சையில் சிக்குவாரா வெங்கட் பிரபு

நான் பணத்தை திருப்பி கேட்கும் போது எல்லாம் அவரோ ரூ. 50 ஆயிரமும், 1 லட்சமும் கொடுத்து அனுப்பிவிடுகிறார். என்றும் அவர் கூறியிருந்தார். இந்த திரைப்படம் கோடை நேரத்தில் OTT வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப் படுகிறது. இந்த திரைப்படமானது இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் தளபதி விஜய் நடிதுதுள்ள THE GOAT திரைப்படத்திற்கு முன்பே வெளியாகும் என்பதால் இந்த திரைப்படம் வெளியானால் அது வெங்கட் பிரபுவிற்க்கு மிகவும் பின்னடவை ஏற்படுத்தும்.

Advertisement