கோலிவுட்டில் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகர் ரஜினிகாந்த். ரஜினியின் இளைய மகள் தான் சௌந்தர்யா. சௌந்தர்யா ரஜினிகாந்த், தொழிலதிபர் அஸ்வினை கடந்த 2010ஆம் ஆண்டு பெற்றோர்கள் சம்மதத்துடன் மிகப் பிரம்மாண்டமான அளவில் திருமணம் செய்து கொண்டார். முதலில் இவர்கள் இருவருக்கும் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக ஒருவரை ஒருவர் பிரிந்து வாழ்ந்திருந்தனர். பின்னர் சௌந்தர்யா மற்றும் அவர் கணவன் அஸ்வின் இருவரும் மனமுவந்து விவாகரத்து பெற்றுக் கொண்டார்கள். சௌந்தர்யா தன்னுடைய மகன் வேத்துடன் ரஜினிகாந்த் வீட்டில் தான் வசித்து வந்தார்.

சௌந்தர்யா விவாகரத்துக்கு பின் முழு கவனத்தையும் திரைப்படங்கள் இயக்குவதும், அனிமேஷன் காட்சிகள் வடிவமைப்பது போன்ற வேலைகளில் தீவிரம் செலுத்தி வந்திருந்தார். இந்த சமயத்தில் சௌந்தர்யா ரஜினிகாந்த், கோவை தொழிலதிபர் வணங்காமுடி மகன் விசாகன் ஆகிய இருவரும் காதலித்து வந்தார்கள். மேலும், இவர்களுடைய காதலுக்கு இரு வீட்டாரும் சம்மதம் தெரிவித்தார்கள்.

இதையும் பாருங்க : அட, புகைப்படத்தில் இருக்கும் இந்த பிரபல பாடகரின் மகன் எந்த நடிகர்னு தெரியுமா ? பாத்தா ஷாக்காகிடுவீங்க.

Advertisement

இவர்களுக்கு கடந்த பிப்ரவரி 10-ம் தேதி திருமணம் நடைபெற்றது. பின் இவர்கள் வெளியில் சென்ற புகைப்படங்களை அடிக்கடி சோசியல் மீடியாவில் பகிர்ந்து வந்தார்கள். இந்நிலையில் சௌந்தர்யா அவர்கள் தனது கணவருக்கு கேக்வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய புகைப்படங்களை தனது சமூக வலைதளபக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

தற்போது அந்த புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது. சமூகவலைதளங்களில் ஆக்டிவ்வாக செயல்பட்டு வரும் சௌந்தர்யா தனது மகன் வேத் புகைப்படங்களை அவ்வப்போது பதிவிட்டு வருவார். இந்நிலையில் நேற்று தனது கணவர் விசாகனுக்கு பிறந்தநாள் என்பதால் வீட்டிலேயே கேக்வெட்டி கொண்டாடியுள்ளார் சவுந்தர்யா ரஜினிகாந்த். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை தனது சமூகவலைதள பக்கத்திலும் வெளியிட்டுள்ளார்.

Advertisement
Advertisement