சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் இரண்டாவது மகள் சௌந்தர்யா கடந்த 2010ஆம் ஆண்டு அஸ்வின் ராம்குமார் என்னும் பிஸ்னஸ்மேனுடன் திருமணம் நடைபெற்றது. மேலும், கடந்த 2011ஆம் ஆண்டு ‘வேத்’ என்னும் மகனும் பிறந்தார். பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2016ஆம் ஆண்டு இருவரும் விவாகரத்து பெற்றனர்.

இதையடுத்து சௌந்தர்யா விசாகன் என்பவரை திருமணம் செய்ய உள்ளார். நடிகர் ரஜினிகாந்தின் மகள் சௌந்தர்யாவின் திருமண வரவேற்பு சென்னை ராகவேந்திரா திருமண மண்டபத்தில் நடைபெற்றது. விசாகன், சௌந்தர்யா ஜோடியின் இந்த திருமண வரவேற்பில், நடிகர் ரஜினிகாந்த், லதா ரஜினிகாந்தின் நெருங்கிய உறவினர்கள் மட்டும் கலந்து கொண்டு, மணமக்களை வாழ்த்தினர்.

Advertisement

நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களுக்கு விதைகள் அன்பளிப்பாக வழங்கப்பட்டது.  இதே போன்று வரும் 11ஆம் தேதி திருமணமும் அன்று, மாலை நட்சத்திர ஹோட்டலில் மீண்டும் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது. அடுத்து 12 ம் தேதியும் போயஸ்தோட்ட இல்லத்தில் 3 வது முறையாக வரவேற்பு நிகழ்ச்சி நடக்க உள்ளது.

இந்நிலையில் சௌந்தர்யா இரண்டாவது திருமணம் செய்துகொள்ளும் விசாகனின் சொத்து மதிப்பு தற்போது வெளியாகியுள்ளது. விசாகன் குடும்பத்திற்கு சொந்தமாக Apex என்ற நிறுவனம் இருக்கிறது. இந்த நிறுவனத்தின் ஆண்டு வருமானம் மட்டும் ரூ. 500 கோடி வருகிறதாம். மேலும், இவர்களின் சொத்துமதிப்பு பல ஆயிரம் கோடி இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

Advertisement
Advertisement