பொதுவாக நடிகர் நடிகைகள் பல்வேறு விளம்பரங்களில் நடித்துள்ளதை நாம் பார்த்துளோம். ஆனால், தனது சொந்தக் கடையின் விளம்பரத்தில் தானே நடித்து பிரபலம் தேடிக்கொண்டவர் சரவணா ஸ்டோர்ஸ் அண்ணாச்சி தான். பேஸ்டு பேஸ்டு பேஸ்டு என்று அணைத்து தொலைக்காட்சிகளிலும் தனது கடைக்கான விளம்பரத்தில் கலர் கலரான ஆடைகளை அணிந்து கொண்டு தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளான ஸ்னேகா துவங்கி தற்போது இருக்கும் ஹன்சிகா வரை அனைவருடனும் இணைந்து விளம்பரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பெரும் பிரபலமடைந்துள்ளார்.

தனது கடையின் விளம்பரத்திற்காக நடிக துவங்கிய அருள் அண்ணாச்சி பின்னர் தமிழ் சினிமா துறை நடத்திய நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார். அப்போது அவரிடம் எதார்தமாக நீங்கள் சினிமாவில் நடிப்பீர்களா என்று கேட்க அதனை சீரியஸாக எடுத்துக்கொண்டு சினிமாவில் நடித்தால் ஹீரோ தான் என்று களமிறப்பிகியுள்ளார் அருள்.இவர் நடிக்க உள்ள படத்தை பிரபல சீரியலை இயக்கிய இரட்டை இயக்குநர்களான ஜேடி- ஜெர்ரி தான் இயக்குகின்றனர். இவர் அஜித் நடித்த உல்லாசம் படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

இந்த படத்தின் பட்ஜெட் பல கோடி என்று கூறப்படுகிறது. இது வதந்தி என்று பலரும் கூறி நிலையில் கடந்த ஆண்டு இந்த படத்தின் பூஜையை துவங்கி அனைவரின் வாயையும் அடைத்தார் நம்ம அருள் அண்ணாச்சி.இந்த படத்தில் அண்ணாச்சிக்கு ஜோடியாக மிஸ் இந்தியா பட்டம் வென்ற “கீத்திகா திவாரி” என்பவர் நடித்து வருகிறார்.அதே போல இரண்டாம் நாயகியாக பாலிவுட் நடிகை ஊர்வசி ராவ்டேலா நடிக்கிறார். இப்படி ஒரு நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்புகள் மணலியில் நடைபெற்று வருகிறது. அதன் புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. சமூக வலைதளத்தில் இந்த புகைப்படங்கள் வைரலாக பரவ, பலரும் இவரை கேலி செய்து வந்தனர்.

இப்படி ஒரு நிலையில் அருள் அண்ணாச்சியின் சினிமா அவதாரத்தை கேலி செய்யும் நெட்டிசன்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக திரு. அர்ஜுன் சரவணன் ஐபிஎஸ் அதிகாரி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை போட்டுள்ளார். அதில், இன்று காலை முதல் நிறைய பேர் இந்த திரைப்படத்தின் ஸ்டில்களை ஸ்மைலி போட்டு அனுப்பினர். இதில் சிரிக்க ஏதுமில்லை. இந்த வயதிலும் ஹீரோவாக நடிக்கவும், கேலி கிண்டல்களை எதிர்கொள்ளவும் தைரியமும் தன்னம்பிக்கையும் வேண்டும்.வாழ்த்துகள் The legend saravana என்று பதிவிட்டுள்ளார்.

Advertisement

போலீஸ் அதிகாரியான அர்ஜுன் சரவணன், தமிழ் சினிமாவின் தீவிர ரசிகராக தான் இருந்து வருகிறார். தமிழ் சினிமாவில் எந்த ஒரு நடிகர் நல்ல விஷயங்களை செய்தாலும் அதனை உடனே பாராட்டி விடுவார். அந்த வகையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் விழா ஒன்றில் பேசிய இவர், யாரொருவர் நம்மை கேவலமாக எண்ணி பேசுகிறார்களோ, அவர்கள் மத்தியில் நன்றாக வாழ்ந்து காட்டுவதே ஒரு மனிதனின் வெற்றி. மேலும், நம் வாழ்க்கையில் நன்றாக வாழ்ந்து காட்டுவது தான் நம் எதிரிக்கு கொடுத்த தண்டனை. அதோடு இந்த விடாமுயற்சியும், தன்னம்பிக்கையும் தான் நான் விஜய்யிடம் இருந்து தான் கற்றுக்கொண்டேன் என்று கூறி இருந்தார். அதே போல இவர் இவர் விஸ்வாசம் படத்தின் போது அஜித்தை பாராட்டி பேசியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement
Advertisement