கிரிக்கெட் சூதாட்டம்..!தற்கொலை முயற்சி செய்த ஸ்ரீசாந்த்..!கண்ணீர் மல்க புலம்பிய வீடியோ..!

By Rajkumar · 27/11/2018
தமிழில் கடந்த இரண்டு ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி ஹிந்தி, தெலுகு, மலையாளம் என்று பல மொழிகளில் ஒளிபரப்பாகியது. இதில் அதிகபட்சமாக இந்தியில் தான் 12 சீனை நெருங்கியுள்ளது. இந்த நிகழ்ச்சியின் 12 வது சீசன் கடந்த செப்டெம்பர் 16 ஆம் தேதி துவங்கியது. [embed]https://twitter.com/ColorsTV/status/1066961156672184320[/embed] இந்த நிகழ்ச்சியில் கிரிக்கெட் வீரரான ஸ்ரீசாந்த் ஊட்டியாளராக பங்கேற்று வருகிறார். ஐ பி எல் சூதாட்டத்தால் கிரிக்கெட் விளையாட தடை பெற்றார். மேலும், இவர் கிரிக்கெட் போட்டிகளில் மிகவும் ஆக்ரோஷமாக விளையாடும் வீரர் என்ற பெயரெடுத்தவர். சமீபத்தில் ஒளிபரப்பான ஒரு எபிசோடில் ஸ்ரீசாந்த் சக போட்டியாளர்களிடம் பேசுகையில், சூதாட்டத்தில் ஈடுபட்டுள்ளேன் என்று பலரும் கூறியபோது நான் மிகவும் மன அழுத்தத்திற்கு உல்லானேன். என்னால் இனி கிரிக்கெட் ஆடவே முடியாது என்று தற்கொலை முயற்சி கூட செய்தேன் என்று கண்ணீர் விட்டபடி பேசியுள்ளார்.
Tamil Behind Talkies AMP · Quick view
View full