கடந்த மார்ச் 22ஆம் தேதி ஸ்ரீ ரெட்டியை சிலர் தாக்கியதாக வளசரவாக்கம் காவல் நிலையத்தில் அவர் புகார் அளித்தார். ஆனால் அவர் அதை வெறும் பரபரப்புக்காக புகார் கொடுத்தார் என காவல்துறை வட்டாரத்தில் இருந்து விஷயம் கசிந்தது.

ஆனால் எப்போது புதிய திருப்புமுனையாக, சில சிசிடிவி விடீயோக்களை அவர் வெளியிட்டுள்ளார். அதில் சுப்பிரமணியம் மற்றும் அவருடன் இரண்டு நபர்கள் தவறான முறையில் நடக்க முற்படுகின்றனர்.

Advertisement

புதிய படம் தொடர்பாக சுப்பிரமணியத்தை தனது வீட்டுக்கு வர சொல்லி இருக்கிறார் ஸ்ரீ ரெட்டி, ஆனால் அவர் இரவு 11:30 மணிக்கு மேல வந்ததால் அவரை சந்திக்க ஸ்ரீ ரெட்டி மறுத்துள்ளார், இருப்பினும் அவர்கள் வலுக்கட்டயமாக நுழைந்துள்ளார். அவரது மேலாளர் தடுத்ததால் காய் கலப்பு ஏற்பட்டுள்ளது.

சுப்பிரமணியம் பேசிய ஆடியோவையும் அவர் வெளியிட்டுள்ளார். அதோடு புதிய புகாரை ஆதாரத்தோடு கமிஷ்னர் அலுவலகத்தில் தரப்போவதாக கூறியுள்ளார்.

Advertisement
Advertisement