சென்னையில் நடந்த ஸ்ரீதேவி பிராத்தனை கூட்டத்திற்கு விஜய் ஏன் வரவில்லை தெரியுமா ?

By Ajju · 13/3/2018
மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் துக்க அனுசரிப்பு கூட்டம் 2 நாட்களுக்கு முன்னர் சென்னையில் உள்ள அவரது வீட்டில் நடைபெற்றது.இந்த கூட்டத்தில் கலந்துகொள்ள பல பிரபலங்கள் ஸ்ரீதேவியின் வீட்டிற்க்கு சென்றிருந்தனர்.நடிகர்கள் சூர்யா,அஜித்,கார்த்திக்,இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான்,பிரபுதேவா ஆகியோர் அந்த கூட்டத்திற்கு நேரில் சென்று ஸ்ரீதேவி குடும்பத்தாருக்கு ஆறுதல் தெரிவித்தனர்.ஆனால் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான விஜய் இந்த கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை. எல்லா விழாக்களிலும் கலந்துகொள்ளும் விஜய் இந்த கூட்டத்தில் ஏன் கலந்துகொள்ளவில்லை என்று பலருக்கும் கேள்வி எழுந்தது. ஆனால் காரணம் என்னவென்றால் தற்போது முருகதாஸ் படத்தில் நடித்துக்கொண்டிருக்கும் விஜய்,வரும் மார்ச் 16 ஆம் தேதி தயாரிப்பாளர்கள் சங்கம் அறிவித்துள்ள ஸ்டரைக்காள் படிப்பிடிப்புகளை விரைந்து முடிக்கவேண்டிய கட்டாயத்தில் மாட்டிக்கொண்டாராம். மேலும் ஸ்ரீதேவியின் துக்க அனுசரிப்பு கூட்டத்திற்கு சென்றால் தம்மால் ஷூட்டிங் பாதிக்கப்படும் என்றும் இதனால் படக்குழுவினர் யாரும் கஷ்டப்படக்கூடாது என்றும் எண்ணியே அந்த கூட்டத்திற்கு செல்லாமல் விட்டுவிட்டார் நடிகர் விஜய்.
Tamil Behind Talkies AMP · Quick view
View full