கணவரின் இறப்பு குறித்து சுருதி போட்டுள்ள உருக்கமான பதிவு அவரது ரசிகர்களை கலங்க வைத்துள்ளது. கடந்த ஆண்டு பல சின்னத்திரை பிரபலங்கள் திடீர் திடீரென்று திருமணத்தை முடித்தனர். அதிலும் சீரியலில் ரீல் ஜோடிகளாக இருந்தவர்கள் நிஜவாழ்க்கையில் ரியல் ஜோடிகளாக மாறிவிடுகிறார்கள். ஷபானா – ஆர்யன், மதன் – ரேஷ்மா, சித்து- ஸ்ரேயா இவர்களைத் தொடர்ந்து தீபக்- அபிநவ்யா ஆகியோர் திருமணம் செய்து கொண்தார்கள். இந்த வரிசையில் கடந்த ஆண்டு திடீர் திருமணத்தை முடித்தார் சின்னத்திரை நடிகை ஸ்ருதி.

இவர் நாதஸ்வரம் சீரியல் மூலம் தான் சின்னத்திரைக்கு அறிமுகமானார். இந்த தொடர் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றிருந்தது. அந்த தொடருக்குப் பின்னர் சுருதி பொன்னூஞ்சல், கல்யாண பரிசு, வாணி ராணி போன்ற பல சீரியல்களில் நடித்து இருக்கிறார். அதேபோல ஒரு சில திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் தனுஷ் நடிப்பில் வெளியான கொடி திரைப்படத்தில் கூட நடித்திருக்கிறார்.

Advertisement

கடந்து ஆண்டு திருமணம் :

இறுதியாக விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வெற்றிகரமாக ஓடிய பாரதி கண்ணம்மா தொடரில் கூட சுருதி நடித்து இருந்தார். இந்த நிலையில் கடந்த ஜனவரி மாதம் 27ஆம் தேதி ஸ்ருதிக்கும், அரவிந்த் சேகர் என்பவருக்கும் பூச்சூடல் விழா நடைபெற்றது. இதுகுறித்த புகைப்படங்களையும் வீடியோக்களையும் ஸ்ருதி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

அரவிந்த் குறித்த விவரம் :

இதனை தொடர்ந்து கடந்த ஆண்டு மே 27ஆம் தேதி ஸ்ருதி -அரவிந்தின் திருமணம் நடைபெற்றது. திருமணம் செய்து கொண்ட அரவிந்த் உடற்பயிற்சியாளராக இருந்து வந்தார். மேலும், இவர் 2022 ஆம் ஆண்டு மிஸ்டர் தமிழ்நாடு பட்டத்தை வென்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. திருமணத்திற்குப் பிறகு நடிப்பிலிருந்து விலகி பிசினஸில் கவனம் செலுத்திக் கொண்டிருந்தார் ஸ்ருதி.கடந்த மே 27 ஆம் தேதி தான் தங்கள் முதல் திருமண நாளை கொண்டாடி இருந்தனர். இப்படி ஒரு நிலையில் இந்நிலையில் இன்று அரவிந்த் மாரடைப்பு காரணமாக காலமாகி இருக்கிறார்.

Advertisement

வீட்டில் இருந்தபோது அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது என முதற்கட்ட தகவல் தெரிவிக்கின்றன. அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்று பரிசோதித்தபோது அவர் இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்து இருக்கின்றனர். ஸ்ருதி சண்முகபிரியாவின் கணவர் மறைவு தற்போது சீரியல் உலகையும் ரசிகர்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இதனால் ரசிகர்கள் பலர் சுருதிக்கு ஆறுதல் கூறி வந்தனர்.

Advertisement

இப்படி ஒரு நிலையில் தனது கணவரரின் இறப்பிற்கு பின் உருக்கமான பதிவு ஒன்றை போட்டுள்ள சுருதி ‘பிரிந்தது உடல் மட்டும் தான். ஆனால் உங்கள் ஆன்மாவும் மனமும் என்னை சுற்றி இப்போதும் எப்போதும் பாதுகாக்கும். Rest in peace என் அன்பே. உங்கள் மீதான என் அன்பு இப்போது மேலும் மேலும் அதிகரித்து வருகிறது. நாங்கள் இருவரும் ஒருவருக்கொருவர் நிறைய நினைவுகளை வைத்திருக்கிறோம். அதனை என் வாழ்நாள் முழுவதும் நினைத்து மகிழ்வேன். மிஸ் யூ, லவ் யூ என் அன்பே.

நீ என் அருகில் இருப்பது போல உணர்கிறேன்’ என்று உருக்கமாக பதிவிட்டுள்ளார். அதே போல அரவிந்த் கடந்த 2ஆம் தேதியே இறந்துள்ளார். ஆனால், நேற்று தான் இந்த தகவல் வெளியானது. இதனால் ரசிகர்கள் பலர் சுருதிக்கு ஆறுதல் கூறி வந்தனர். இதுகுறித்து பதிவிட்டுள்ள சுருதி ‘உங்களின் பிரார்த்தனைகளும் மற்றும் ஆறுதல்களும் எனக்கும் என்னுடைய குடும்பத்தாருக்கும் காலை முதல் மிகுந்த பலத்தை கொடுத்திருக்கிறது. உங்களின் அனைவரின் பிரார்த்தனைகளுக்கும் மிகவும் நன்றி’ என்று பதிவிட்டுள்ளார்.

Advertisement