தனுஷ் – ஐஸ்வர்யா குறித்து பாடகி சுசித்ரா அளித்திருக்கும் பேட்டி வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தனுஷ் அவர்கள் தமிழ் சினிமா உலகில் நடிகராக மட்டுமில்லாமல் திரைப்பட தயாரிப்பாளர், பின்னணிப் பாடகர், திரைப்பட பாடலாசிரியர், திரைக்கதையாசிரியர், திரைப்பட இயக்குனர் என பல துறைகளில் தன்னுடைய திறமையை காண்பித்து வருகிறார். இதனிடையே நடிகர் தனுஷ் அவர்கள் 2004 ஆம் ஆண்டு ரஜினியின் மூத்த மகளான ஐஸ்வர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

மேலும், தனுஷின் மனைவியான ஐஸ்வர்யா பரத நாட்டியத்தில் சிறந்து விளங்கி வருகிறார்.
இவர் 3 ,வை ராஜா வை போன்ற படங்களை இயக்கியிருந்தார். தனுஷுக்கு இரண்டு மகன்கள் உள்ளார்கள். மூத்த மகன் யாத்ரா , இளைய மகன் லிங்கா ஆவார். இந்நிலையில் இவர்கள் இருவரும் தங்களின் 18 ஆண்டுகள் குடும்ப வாழ்க்கையில் இருந்து பரஸ்பரமாக பிரிய முடிவு செய்து இருப்பதாக அறிவித்து இருந்தார்கள்.

Advertisement

தனுஷ்-ஐஸ்வர்யா விவாகரத்து:

இது ரசிகர்களுக்கு மட்டும் இல்லாமல் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. கடந்த இரண்டு ஆண்டுகளாக ஒட்டுமொத்த தமிழகம் முழுவதும் தனுஷ்- ஐஸ்வர்யா விவாகரத்து குறித்து தான் பேசிக் கொண்டிருந்தது. சோசியல் மீடியாவை ஓபன் பண்ணினாலே போதும் தனுஷ் – ஐஸ்வர்யா விவாகரத்து குறித்த கருத்துக்களும், வீடியோக்களும் தான் உலா வந்து கொண்டிருக்கின்றது. இவர்களை சேர்த்து வைக்க பலர் முயற்சி செய்து வருகின்றனர்.

விவாகரத்து குறித்த சர்ச்சை:

மேலும், பிரிய போகிறோம் என்று அறிவித்த பிறகு இருவரும் தங்களின் கேரியரில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்கள். அந்த வகையில் சமீபத்தில் ஐஸ்வர்யா இயக்கத்தில் வெளிவந்த லால் படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று இருந்தது. இந்த படத்தில் ரஜினி, விக்ராந்த், விஷ்ணு உட்பட பலர் நடித்து இருந்தார்கள். அதேபோல் தனுஷ் படங்களில் நடித்து வருகிறார். இப்படி இருந்தும் அவ்வபோது தனுஷ்- ஐஸ்வர்யா குறித்த செய்திகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisement

பாடகி சுச்சி பேட்டி:

இந்த நிலையில் பாடகி சுச்சி அவர்கள் சமீபத்தில் அளித்த பேட்டியில் தனுஷ்- ஐஸ்வர்யா குறித்து கூறியிருந்தது, தனுஷ்- ஐஸ்வர்யா விவகாரத்தில் தனுஷ் நல்ல தந்தை. ஆனால், ஐஸ்வர்யா ரொம்ப மோசமான அம்மா. அவர் எந்த விதத்தில் நல்ல அம்மா? என்று சொல்கிறீர்கள். அவர் தன்னைப் பற்றி மட்டும் தான் ப்ரோமோட் செய்கிறார் தவிர குழந்தைகளுக்காக எதையும் செய்யவில்லை. ஆனால், தனுஷ் குழந்தைகளுக்காக நிற்கிறார்.

Advertisement

தனுஷ்-ஐஸ்வர்யா குறித்து சொன்னது:

எனக்கும் தனுஷுக்கும் இடையே பிரச்சனை இருக்கட்டும். ஆனால், இந்த விஷயத்தில் தனுஷ் தான் சரி. ஒரு அம்மாவாக ஐஸ்வர்யா தன்னுடைய கடமைகளை எதுவும் செய்யவில்லை. இவர்கள் இருவரும் பிரிவதற்கு காரணமே ஐஸ்வர்யா டேட்டிங் செய்து கொண்டிருந்தார். தனுஷும் செய்து தான் கொண்டிருந்தார். ஒரு கட்டத்தில் அதுவே இருவருக்கும் பிரச்சனை. தனுஷ்-ஐஸ்வர்யா இருவரும் மேல் தப்பு இருக்கிறது என்று கூறியிருக்கிறார்.

Advertisement