கடந்த ஜனவரி மாதம் சென்னை பள்ளிக்கரணையில் குப்பைக்கிடங்கில் பெண்ணின் கை, கால் கண்டெடுக்க பட்ட விவகாரத்தில் துப்பு துலங்கியது. இறுதியில் அந்த பெண்ணின் கையில் இருந்த டாட்டூவை வைத்து அந்த பெண் யார் என்பதை கண்டுபிடித்தனர்.
போலீசார் நடத்திய விசாரணையில் அவர் தூத்துக்குடியைச் சேர்ந்த சங்கீதா என்பது தெரியவந்தது. அந்தப்பெண்ணை கணவரே கொலை செய்தது விசாரணையில் அம்பலமாகியுள்ளது. சென்னையில் தான் கொலை சம்பவம் நிகழ்ந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
இது தொடர்பாக அப்பெண்ணின் கணவரிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். இந்நிலையில் அவர் தூத்துக்குடியைச் சேர்ந்த சங்கீதா என்பது தெரியவந்தது. அந்தப்பெண்ணை கணவரே கொலை செய்தது விசாரணையில் அம்பலமாகியுள்ளது.
மேலும், கொலை செய்யப்பட்ட சங்கீதா ஒரு சில திரைப்படங்களில் துணை கதாபத்திரத்தில் நடித்துள்ளார். மேலும், இவர் ‘காதல் இலவசம்’ என்ற படத்தையும் இயக்கியுள்ளாராம். தற்போது இவரது சில புகைப்படங்களும் நமக்கு கிடைக்கபெற்றுள்ளது.