சினிமா நடிகைகளும் சரி சின்னத்திரை நடிகைகளும் சரி எத்தனையோ பேர் போட்டோ ஷூட் மூலம் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்து இருக்கிறார்கள். அதிலும் சமீபகாலமாக சினிமா நடிகைகளை விட சீரியல் நடிகைகள் தான் போட்டோ ஷூட்டில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்கள். அந்த வகையில் மொட்டைமாடி போட்டோ ஷூட் மூலம் பிரபலமடைந்தவர் ரம்யா பாண்டியன், ஷிவானி நாராயணன், தர்ஷா குப்தா என்று சொல்லிகொண்டே போகலாம்.அந்த வகையில் இளம் நடிகைகளுக்கு இணையாக கவர்ச்சியான போட்டோ ஷூட்களை நடத்தி டப் கொடுத்து வருபவர் Vjவும் நடிகையுமான மகேஸ்வரி.

தொலைக்காட்சிகளில் வரும் தொகுப்பாளர்கள் சிலர் ரசிகர்கள் மனதில் நீங்காத இடத்தை பிடித்து விடுகிறார்கள். அதிலும் குறிப்பாக கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் சன் மியூசிக் தொலைக்காட்சியில் வந்த தொகுப்பாளர்கள் தற்போதும் ரசிகர்கள் மறக்காமல் நினைவில் வைத்துக் கொண்டிருக்கிறார்கள்.அந்த வகையில் பிரபல பெண் தொகுப்பாளினியான மகேஸ்வரியும் ஒருவர். மகேஸ்வரி தொகுப்பாளினியாக அறிமுகமானது சன் டிவியில் ஒளிபரப்பான அசத்தப்போவது யாரு நிகழ்ச்சி மூலம் தான்.அதன் பின்னர் இசையருவி தொலைக்காட்சியில் தொகுப்பாளராக பணியாற்றி வந்தார்.

Advertisement

இடையில் திருமணம் ஆனதால் பிரேக் எடுத்துக்கொண்ட மகேஸ்வரி ஒரு குழந்தைக்கும் தாயானார் அதன் பின்னர் மீண்டும் தொலைக்காட்சியில் பணிபுரிய தொடங்கினார்.மேலும் இவர் தாயுமானவன் புதுக்கவிதை போன்ற ஒரு சில சீரியல்களில் கூட நடித்திருக்கிறார்.மேலும், குயில், மந்திர புன்னகை, சென்னை 28 -2 போன்ற படங்களில் கூட நடித்திருக்கிறார். .திருமணம் முடிந்து ஒரு குழந்தைக்கு தாயான நிலையில் மகேஸ்வரி சமீப காலமாக கவர்ச்சியான போட்டோ ஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு வருகிறார்.

இவர் தொகுப்பாளினியாக இருந்து பிரபலமானதை விட போட்டோ ஷூட் மூலம் பிரபலமானது தான் அதிகம் என்று கூட சொல்லலாம். அந்த வகையில் சமீபத்தில் இவர் மாடர்ன் உடைகளில் இருக்கும் சில புகைப்படங்களை பதிவிட்டு இருந்தார். இதற்கு வழக்கம் போல பல கமன்ட்கள் வந்தாலும், ஒரு சிலர் மகேஸ்வரியை கடுமையாக விமர்சித்து கமன்ட்களை போட்டு வருகின்றனர். அப்படி ட்விட்டர் வாசி ஒருவர் படு மோசமாக கமன்ட் செய்து இருந்தார்.

Advertisement

அதில் ‘1999 ல்லே உன் நிர்வாண விடியோ வந்துருச்சு இப்போது எதுக்கு இந்த தேவையில்லா வேலை சதைக்கு ஆசைபடுற ஆள் யாரும் இல்லை தசையை முறுக்குற ஆள் தான் இங்கே இருக்கு நீயெல்லாம தமிழ்நாட்டில் வாழாதே ஆந்திராவுக்கு ஓடிடு’ என்று மோசமான பதிவை போட்டிருந்தார். இதை கண்ட பலரும் ஷாக்கடைந்தார்கள். இதற்கு பதில் அளித்த மகேஸ்வரி ‘வாவ், 1999 ல வந்துச்சா சார், அப்போ எனக்கு பத்து வயசு தான் சார் இருக்கும். அப்போ நான் கொழந்த சார் ‘என்று பதிலடி கொடுத்துள்ளார்.

Advertisement
Advertisement