தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் மூலம் பல்வேறு நடிகர் நடிகைகள் மக்கள் மத்தியில் பெரும் பிரபலம் அடைந்துள்ளனர். அந்த வகையில் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பல சீரியல்களில் வில்லியாக அசத்தியவர் சீரியல் நடிகை ராணி.

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான வள்ளி தொடரில் இந்திர சேனா என்ற கதாபாத்திரத்தில் வில்லியாக வந்து அனைவரையும் அசத்தியவர் நடிகை ராணி. சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற இவர் நீதிமன்றம் தடைவிதித்தது குறித்து பேசியுள்ளார்.

Advertisement

இது குறித்து பேசியுள் அவர், பிராங்க் ஷோக்களால் எனது வாழ்வில் நானும் பாதிக்கப்பட்டு அதனால் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் அளவிற்கு சென்று உள்ளேன். ஒரு சீரியலில் படப்பிடிப்பில் நான் இருந்தபோது உணவு இடைவேளையில் வந்த ஒரு ரசிகர் என்னிடம் கையொப்பம் வேண்டும் என்றும் புகைப்படம் எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

அவர் கேட்டார் என்று நானும் அவரிடம் புகைப்படம் எடுக்க சம்மதித்தேன். புகைப்படம் எடுக்கையில் அவர் என் மீது மோசமாக உரசினா.ர் உடனே எதற்காக என்னை உரசிகிரீர்கள் என்று கேட்டதற்கு ‘நீ எனக்கு வேண்டும் என்று என்னிடம் அவர் கூறியபோது நான் பயந்தேவிட்டேன். உடனே எனது காதுக்கு அருகில் வந்து சப்தமிட்டபடி அந்த ஓடிவிட்டார். அதன் பின்னர் எனது காது மிகவும் வலிக்கத் துவங்கியது. இதனால் நான் ஒரு வாரம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தேன். அதனால்தான் பிராண்ட் ஷோக்களுக்கு தடை விதித்துள்ளதை நான் வரவேற்கிறேன் என்று கூறியுள்ளார்

Advertisement
Advertisement