நடிகை மாளவிகாவால் எனக்கும் குஷ்புவுக்கும் சண்டை வந்தது என்று இயக்குனர் சுந்தர் சி அளித்து இருக்கும் பேட்டி தான் தற்போது நேரத்தில் வரலாறு வருகிறது தமிழ் திரையுலகில் பிரபல இயக்குநராகவும், நடிகராகவும் வலம் வந்து கொண்டிருப்பவர் சுந்தர்.சி. இவர் 1995-ஆம் ஆண்டு வெளி வந்த ‘முறை மாமன்’ படத்தினை சுந்தர்.சி இயக்கியிருந்தார். இது தான் இவர் இயக்கிய முதல் தமிழ் திரைப்படமாம். இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று சூப்பர் ஹிட்டானது.

இதனைத் தொடர்ந்து இவர் அடுத்தடுத்து பல தமிழ் படங்களை இயக்கினார். மேலும், தமிழ் திரையுலகில் ஒரு இயக்குநர் என்பதுடன் தனது திரைப் பயணம் நின்று விடக் கூடாது என்று நினைத்த சுந்தர்.சி அடுத்ததாக ஹீரோவாகவும் அவதாரம் எடுத்தார். இவர் ‘தலைநகரம்’ என்ற படத்தின் மூலம் ஹீரோ ஆனார். இந்த படத்தினை பிரபல இயக்குநர் சுராஜ் இயக்கியிருந்தார். இந்த படத்தின் வெற்றிக்கு பிறகு இவர் ‘வீராப்பு, படத்தின் ஆயுதம் செய்வோம், பெருமாள், தீ, இருட்டு போன்ற பல படங்களில் நடித்தார்.

Advertisement

சுந்தர் சி திரைப்பயணம்:

அதன் பிறகு அவரே இயக்கி நடித்த ‘நகரம் மறுபக்கம், கலகலப்பு 1&2, அரண்மனை 1 & 2, 3’ போன்ற படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. அந்த வகையில் தற்போது சுந்தர் சி அவர்கள் அரண்மனை நான்காம் பாகத்தை இயக்கியிருக்கிறார். இதில் சுந்தர் சி, தமன்னா, ராசி கண்ணா, யோகி பாபு, கோவை சரளா, சிங்கம் புலி, விடிவி கணேஷ், ஜே பி விச்சு, விடிவி ஜி எஃப் ராம், சேசு, சந்தோஷ் பிரதாப், மொட்டை ராஜேந்திரன் உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள்.

அரண்மனை 4 படம்:

இந்த படத்திற்கு ஹிப் ஹாப் ஆதி இசையமைத்திருக்கிறார். இந்த படத்தை Avni Cinemax சார்பில் குஷ்பு சுந்தர் மற்றும் Benz Media PVT LTD சார்பில் Benz அருண்குமார் தயாரித்து இருக்கிறார்கள். மேலும், இதுவரை வந்த மூன்று பாகங்களை விட இந்த படத்தை கொஞ்சம் வித்தியாசமாக இயக்குனர் எடுத்திருக்கிறார். சில தினங்களுக்கு முன்பு தான் அரண்மனை 4 படம் வெளியாகியிருக்கிறது. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்றிருக்கிறது. இதை அடுத்து சுந்தர் சி அவர்கள் கலகலப்பு படத்தின் மூன்றாம் பாகத்தை எடுக்க தயாராக இருப்பதாக கூறப்படுகிறது.

Advertisement

சுந்தர் சி பேட்டி:

இந்த நிலையில் சமீபத்தில் பிரபல சேனலுக்கு சுந்தர் சி பேட்டி ஒன்று அளித்திருந்தார். அதில் அவர் மாளவிகா குறித்து கூறியிருந்தது, நடிகை மாளவிகாவை நான்தான் அறிமுகப்படுத்தினேன். நான் அறிமுகப்படுத்திய நடிகைகளில் பிடித்த நடிகை மாளவிகா தான். அவருடைய உண்மையான பெயர் ஸ்வேதா. ஸ்வேதாவிற்கு மாளவிகா என்று பெயர் வைத்ததால் எனக்கும் குஷ்பூவுக்கும் பெரிய சண்டை வந்தது. காரணம், எங்களுக்கு பெண் குழந்தை பிறந்தால் மாளவிகா என்ற பெயர் வைக்கணும் என்று குஷ்பூ நிறைய யோசித்து பெரிய பெரிய புத்தகமெல்லாம் தேடி தேடி அந்த பெயரை செலக்ட் பண்ணி வைத்திருந்தார்.

Advertisement

மாளவிகா குறித்து சொன்னது:

அப்போது நான் உன்னை தேடி படத்துடைய பாடலை காம்போஸ் செய்ய தேவா சாரை பார்க்க போனேன். அப்போது குஷ்பூ எனக்கு போன் செய்து, மாளவிகா என்று நம் குழந்தைக்கு பெயர் செலக்ட் பண்ணி இருக்கிறேன் என்று சொன்னார். நானும் பெயர் சூப்பராக இருக்கிறது என்று சொல்லி அந்த பெயரை தேவா சாரிடம் சொல்லி ஒரு பாட்டு பண்ணோம். அந்த படத்தில் ஸ்வேதாவுக்கு மாளவிகா என்று பெயர் வைத்தோம். இந்த விஷயத்தை கேள்விப்பட்டு குஷ்புவுக்கு கோபம் வந்துவிட்டது. எனக்கும் அவங்களுக்கும் பெரிய சண்டையே நடந்தது. அப்படித்தான் இந்த மாளவிகா பெயர் வந்தது. அந்தப் பெயரை அப்படியே அவங்களும் வைத்துக் கொண்டார்கள். அந்தப் படத்தில் அவர்களுக்கு நடிக்கவும் தெரியாது, டான்ஸ் ஆடவும் தெரியாது. இப்பதான் அவருக்கு டான்ஸ், நடிப்பெல்லாம் நன்றாக வருது என்று இயக்குனர் கூறியிருக்கிறார்.

Advertisement