1000 கோடி சம்பளம் வாங்கும் சுந்தர் பிச்சை செய்த முதல் வேலை என்ன தெரியுமா.!

By Rajkumar · 8/3/2019

இந்தியாவின் உலகின் மிகப்பெரிய நிறுவனமான கூகுள் நிறுவனத்தின் ceo என்ற மிகப்பெரிய ஒரு பெண் இருந்துவரும் சுந்தர்பிச்சை தமிழகத்திற்கு மட்டுமின்றி ஒட்டு மொத்த இந்தியாவிற்கும் பெருமை சேர்த்துத் தரும் நபராக விளங்கி வருகிறார் ஆனால் அவரது முந்தைய வாழ்க்கை அவ்வளவு எளிதாக அமைந்து விடவில்லை.

சுந்தர் பிச்சை மதுரையில் உள்ள ஒரு மாவட்டத்தில் தான் பிறந்தார் தனது பத்தாம் வகுப்பு படிப்பை ஜவஹர் வித்யாலயா பள்ளியிலும் , தனது பன்னிரண்டாவது படிப்பை வனவாணி பள்ளியில் படித்து முடித்த பின்னர் கரக்பூரில் உலோகப் பொறியியல் ஸ்டான்ஃபோர்ட் யூனிவர்சிட்டியில் எம்எஸ் முதுகலைப் பட்டம் பெற்றார்.

இவை அனைத்தும் நாம் விக்கிப்பீடியாவில் தேடினாலே கிடைத்து விடும். ஆனால் ,விக்கிப்பீடியாவில் கூட இல்லாத சில செய்திகளை பிரபல times நிறுவன பத்திரிக்கை ஒன்றிற்கு பேட்டியளித்துள்ளார் சுந்தர் பிச்சை. இது குறித்து பேசிய அவர் பேசுகையில் , சென்னையில் இரண்டு அறைகள் கொண்ட ஒரு சாதாரண வீட்டில்தான் நாங்கள் வாழ்ந்து வந்தோம். ஆனால், அப்போது டிவி, ஃப்ரிட்ஜ்,மோட்டார் சைக்கிள் போன்ற எந்த பொருட்களும் எங்களிடம் இருந்தது இல்லை. இப்போது வேண்டுமானால் என்னை பலரும் ஒரு மிகப்பெரிய நிறுவனத்தின் சிஇஓவாக தான் பார்க்கிறார்கள்.

ஆனால் நான் மிகவும் எளிமையானவன் ஆடம்பர வாழ்க்கையை விரும்பாதவன் நாங்க ஊரில் கடுமையான வறட்சி இதையெல்லாம் நான் சந்தித்துள்ளேன். தண்ணீருக்கு நாங்கள்கஷ்டப்பட்டுளோம் அதனால் தற்போது இப்போது கூட நான் தூங்கும்போது தலைமாட்டில் ஒரு தண்ணீர் பாட்டில் வைத்துக் கொண்டு தான் படுப்பேன். சிறுவயதில் எங்கள் வீட்டில் ஃபிரிட்ஜ் கிடையாது அதைப் பற்றிக் கவலைப்பட்டது கிடையாது. ஆனால்,நான் அதனை முதன்முதலில் சம்பாதித்து வாங்கிய போது அதுவே எனக்கு மிகப்பெரிய சாதனையாக இருந்தது. முதன் முதலில் செய்த வேலை மெக்கன்சி என்ற கம்பெனியில் பொறியியல் மற்றும் தயாரிப்பு மேலாண்மை அதிகாரியாக பணியாற்றினேன்.

சிறுவயதில் எனக்கு கிரிக்கெட் விளையாடுவது தான் மிகவும் பிடிக்கும். அதேபோல இதனால் சிறு வயதில் கம்ப்யூட்டர் என்ற பெயரை கேட்டாலே அது மிகப் பெரிய ஆச்சரியம் .நான் சிறுவயதில் ஒரு நான்கு முறை மட்டுமே கம்ப்யூட்டரை இயக்கி இருக்கிறேன். ஆனால், அதுவே எவ்வளவு கடினம் என்பது எனக்குத்தான் தெரியும் என்று கூறியுள்ளார். சுந்தர் பிச்சை தற்போது வேண்டுமானால் ஆயிரம் கோடிக்கு மேல் சம்பளம் வாங்கும் ஒரு நபராக இருந்திருக்கலாம் ஆனால் இவர் சிறுவயதில் எத்தனை கஷ்டங்களை பெற்றுள்ளார் என்பது பலரும் அறிந்திராத ஒன்று

Tamil Behind Talkies AMP · Quick view
View full