விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளுக்கு என்றே ஒரு தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது. அதிலும் சீரியல்களுக்கு நிகராக வித்தியாசமான கான்செப்டில் நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி வருகிறார்கள். அந்த வகையில் விஜய் டிவியில் எத்தனையோ நிகழ்ச்சிகள் வந்தாலும் ஆணிவேராக மக்கள் மத்தியில் என்றென்றும் நீங்கா இடம் பிடித்திருக்கும் நிகழ்ச்சிகளில் ஒன்று சூப்பர் சிங்கர். இந்த நிகழ்ச்சி பல ஆண்டு காலமாக மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்று வருகிறது.

இந்த நிகழ்ச்சி தான் வெள்ளித்திரைக்கு பாடகர்களை அறிமுகப்படுத்தும் பாலம் என்று சொல்லலாம். இது ஜூனியர், சீனியர் என்று இரு பிரிவில் நிகழ்ச்சிகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் ஏகப்பட்ட பேருக்கு வெள்ளித்திரையில் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. மேலும், ஏகப்பட்ட சிங்கர் சீனியர்ஸ் நிகழ்ச்சியை விட மழைலை குரல்கள் ஒலிக்கும் சூப்பர் சிங்கர் ஜூனியர்ஸ் நிகழ்ச்சிக்கு தான் ரசிகர்கள் மத்தியில் ஏகப்பட்ட வரவேற்ப்பு இருந்து வருகிறது.

Advertisement

சூப்பர் சிங்கர் ஜூனியர்ஸ் நிகழ்ச்சி:

அந்த வகையில் இந்த ஆண்டு சூப்பர் சிங்கர் ஜூனியர்ஸ் 8 நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பல குழந்தைகள் பங்கேற்றிருந்தனர். இந்த நிகழ்ச்சியை மா கா பா ஆனந்த் மற்றும் பிரியங்கா தேஷ்பாண்டே தொகுத்து வழங்கி இருந்தார்கள். இந்த நிகழ்ச்சி தொடக்கத்தில் இருந்தே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. மேலும், இந்த நிகழ்ச்சியின் இறுதி போட்டியில் அபீனா, ட்ரினிடா, நேஹா, கிரிஷாங், ரிஹானா என்று 5 பேர் இறுதி போட்டிக்கு தகுதி பெற்று இருந்தனர்.

இறுதிச் சுற்று:

நேற்று பிரம்மாண்டமாக இந்த சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 8 நிகழ்ச்சியில் இறுதிச் சுற்று நடைபெற்றது. ஒவ்வொரு சீசனிலும் இசைத்துறையை சார்ந்த ஜாம்பவான்கள் சிறப்பு விருந்தினராக பங்கேற்று இருந்தார்கள். அந்த வகையில் இந்த வருடம் யுவன் சங்கர் ராஜா இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்று இருந்தார். இந்த சீசனில் முதல் பரிசை கிரிஷாங் தட்டி சென்றார். அவருக்கு 60,000,00 மதிப்புள்ள வீடு பரிசாக வழங்கப்பட்டது.

Advertisement

வெற்றி பெற்ற போட்டியாளர்கள்:

பின் மேடையில் பேசிய யுவன் சங்கர் ராஜா தனது இசையில் கிரிஷாங் பாட வாய்ப்பு கொடுத்துள்ளார். இவரை தொடர்ந்து இரண்டாம் இடத்தை ரிஹானா பெற்றார். ஆனால், மக்கள் அளித்த வாக்குகளின்படி இவர் தான் முதலிடத்தில் இருந்தார். இவருக்கு 5 லட்சம் பணம் பரிசாக வழங்கப்பட்டது. மூன்றாம் இடத்தை நேஹாவும் பெற்றார். இவருக்கு 3 லட்சம் பணம் மற்றும் 5 சவரன் தங்க காயின் பரிசாக வழங்கப்பட்டது.

Advertisement

வெற்றியாளர்கள் குறித்த சர்ச்சை:

ஆனால், இந்த வெற்றியாளர்கள் குறித்த சர்ச்சை தற்போது சோசியல் மீடியாவில் எழுந்து உள்ளது. பொதுவாக சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் இருந்து யாராவது திறமையான பாடகர்கள் வெளியேறினால் சர்ச்சைகள் ஏற்படுவது வழக்கமான ஒரு விஷயம் தான். அதேபோல இதுவரை நடந்து முடிந்த பல்வேறு சூப்பர் சிங்கர் சீசன்களின் டைட்டில்களை தகுதியானவர்களுக்கு கொடுக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டும் இருந்து தான் வருகிறது. அந்த வகையில் இந்த சீசனிலும் இந்த சர்ச்சை எழுந்து இருக்கிறது.

கொந்தளிப்பில் ரசிகர்கள்:

இந்த சீசனில் வெற்றி பெற்ற கிரிஷாங்கிற்கு பலர் வாழ்த்துக்களை கூறி வந்தாலும் இந்த சீசனில் முதல் இடத்திற்கு தகுதியானவர் நேஹா தான் என்று பலரும் கூறி வருகின்றனர். மேலும், விஜய் டிவியின் அதிகாரப்பூர்வ சமூக வலைதள பக்கங்களில் கூட நேஹா தான் உண்மையான வெற்றியாளர் என்றும் நாங்கள் கஷ்டப்பட்டு வாக்களித்த போட்டியாளரை வெற்றியாளாராக அறிவிக்காமல் இருக்க எதற்கு பொதுமக்களை ஓட்டு போட வைக்கிறீர்கள்? என்றும் கூறி வருகின்றனர்.

Advertisement