சூப்பர் சிங்கர் புகழ் ரக்‌ஷிதா கார் விபத்தில் சிக்கி இருக்கும் சம்பவம் அவரது ரசிகர்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. விஜய் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் மூலம் பிரபலமானவர் தான் நடிகை ரக்ஷிதா சுரேஷ். இவர் தன்னுடைய இளமையான குரலின் மூலம் ரசிகர்களை கவர்ந்து முன்னணி பாடகியாக இசை துறையில் தற்போது வலம் வந்து கொண்டிருக்கிறார். சோசியல் மீடியாவில் மிக ஆக்டிவாக இருக்கும் இவர் தற்போ தனக்கு நேர்ந்துள்ள கார் விபத்து குறித்து போட்டு இருக்கும் பதிவு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

2009ஆம் ஆண்டு ஏசியாநெட்டில் ஒளிபரப்பான “லிட்டில் சூப்பர் சிங்கர்” நிகழ்ச்சியில் பங்கேற்ற ரக்ஷிதா அதன் மூலம் பிரபலமானர். பின்னர் விஜய் டிவியில் ஒளிபரப்பான “சூப்பர் சங்கர்” நிகழ்ச்சியில் பங்கேற்றது மிகவும் பிரபலமாக ஆனார் . அந்த போட்டியில் ரன்னர் அப் ஆன பிறகு பரவலான பாராட்டுகளை பெற்றிருந்தார். சூப்பர் சிங்கர் 6 நிகழ்ச்சியில் கோல்டன் வாய்ஸ் என அறியப்பட்டார் அவருக்கு பின்னர் பல விதமான வாய்ப்புகள் கிடைத்தன.

Advertisement

தற்போது பாடகி ரக்ஷிதா பல்வேறு திரைப்படங்களில் முன்னணி பாடகியாக பாடல்களை பாடி வருகிறார். உதாரணமாக பொன்னியின் செல்வன், கோப்ர மற்றும் வெந்து தணிந்தது காடு போன்ற படங்களில் ஆஸ்கார் நாயகன் ஏஆர் ரகுமானுடன் இணைந்து பாடிய பாடினால் இவருக்கு தனியாக ஒரு ரசிகர் பட்டாளமே வந்து விட்டது. மேலும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மிகவும் ஆகிட்டிவாக இருக்கும் அவர் 7 லட்சம் பின்தொடர்பவர்களுக்கு மேலே வைத்திருக்கிறார்.

இந்த நிலையில் தனக்கு நேர்ந்த கார் விபத்து குறித்து தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள அவர் ‘இன்று காலை நான் மலேசியாவில் உள்ள விமான நிலையத்திற்கு திரும்பிக் கொண்டிருந்த போது நான் சென்ற கார் டிவைடரில் மோதி சாலையோரத்தில் மோதியது. அந்த 10 வினாடிகள் தாக்கத்தின் போது என் முழு வாழ்க்கையும் எனக்கு முன்னால் பளிச்சிட்டது.ஏர்பேக்குகளுக்கு நன்றி, இல்லையெனில் விஷயங்கள் மோசமாக இருந்திருக்கும். நடந்த விஷயத்தை நினைக்கும் போது இன்னும் நடுங்குகிறது.

Advertisement

ஆனால் நானும், ஓட்டுனரும் மற்றும் முன் இருக்கையில் அமர்ந்திருந்த மற்ற சக பயணிகளும் சிறிய வெளிப்புற காயங்கள் மற்றும் ஒரு சில உள் காயங்களுடன் பாதுகாப்பாக இருப்பதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். உயிருடன் இருப்பது நன்றி மற்றும் அதிர்ஷ்டம்’ என்று பதிவிட்டுள்ளார். ரக்‌ஷிதாவின் இந்த பதிவை தொடர்ந்து அவரது ரசிகர்கள் பலரும் அவருக்கு ஆறுதல் கூறி வருகின்றனர். மேலும், விஜய் டிவி பாவனா, பாடகி ஜோனிடா காந்தி போன்ற பலர் ரக்‌ஷிதாவுக்கும் ஆறுதல் கூறி வருகின்றனர்.

Advertisement
Advertisement