இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் சூர்யா நடித்த ஜெய் பீம் படம் அமேசான் ப்ரைம் ஒடிடி தளத்தில் வெளியாகி இருந்தது. பழங்குடியின மக்களின் வாழ்க்கை குறித்தும், உண்மையில் அவர்களுக்கு நடந்த அநீதியை குறித்தும் சொல்லும் கதையாக ஜெய்பீம் அமைந்து இருந்தது. மேலும், இந்தப்படம் மக்களின் மனதில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. அதே போல இந்த படத்தில் வன்னியர்களை இழிவுபடுத்தியதாக பல வன்னிய சமூகத்தினர் குற்றம் சாட்டினார்கள். குறிப்பாக இந்த படத்தில் வில்லனாக வந்த ‘குருமூர்த்தி’ என்ற கதாபாத்திரத்தின் வீட்டில் இருக்கும் காலண்டரில் அக்னி குண்டம் படம் காட்டப்பட்டது.

இது பல வன்னியர் சமூகத்தினரை காயப்படுத்தவாக குற்றச்சாட்டுங்கள் எழுந்தது. இதனால் படத்தில் அந்த அக்னி கலசம் நீக்கப்பட்டது. இருப்பினும் இந்த படத்தில் உண்மையான செங்கேணி பார்வதிக்கு நியாயம் கிடைக்க போராடிய வன்னியரின் பெருமையை சொல்லவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்தது. இந்த படத்திற்கு எதிராகவும் சூர்யாவிற்கு எதிராகவும் பல்வேரு வன்னிய அமைப்புகள் தொடர்ந்து எதிர்புகளை தெரிவித்து வருகிறது.

Advertisement

அதே போல சூர்யாவிற்கு அவரது ரசிகர்கள் ஆதரவாக இருந்து வருகின்றனர். மேலும், பல்வேறு சினிமா பிரபலங்கள் சூர்யாவிற்கு தொடர்ந்து ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இருப்பினும் சூர்யாவிற்கு தொடர்ந்து சமூக வலைதளத்தில் வரும் மிரட்டல்களால் சென்னை தியாகராய நகரில் உள்ள ஆர்காடு சாலையில் அமைந்துள்ள நடிகர் சூர்யாவின் வீட்டிற்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

நடிகர் சூர்யா தயாரிப்பில் பாதுகாப்பு ஏதும் கோரப்படாத நிலையில் உளவுத்துறை அறிக்கையின்படி இந்த பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. இந்த நிலையில் பல்வேறு சர்ச்சைகளுக்கு இடையில் சூர்யா, ட்வீட் ஒன்றை போட்டுள்ளார். அதில், ஜெய் பீம் படத்துக்கு நீங்கள் காட்டும் அன்பு அளவற்றது. இதற்கு முன் இதை நான் கண்டதில்லை. நீங்கள் கொடுத்த நம்பிக்கைக்கும், உறுதிக்கும் வார்த்தைகளால் நன்றி சொல்ல முடியவில்லை. உங்கள் அனைவருக்கும் என் இதயப் பூர்வமான நன்றிகள் என்று பதிவிட்டுள்ளார். சூர்யாவின் இந்த பதிவை ரசிகர்கள் பலரும் லைக் செய்து வருகின்றனர்.

Advertisement
Advertisement