பாலிவுட் திரையுலகில் சில தினங்களுக்கு முன் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பையும்,அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது. இவர் திரைத்துறை மீது இருந்த ஆர்வத்தினால் படிப்பை பாதியில் நிறுத்திவிட்டார். நடனம் மற்றும் நடிப்பு கலைகளை முறையாக கற்றுக் கொண்டு திரைத்துறைக்குள் நுழைந்தார். ஆரம்பத்தில் இவர் நடன கலைஞராகவும், சிறு சிறு கதாபாத்திரங்களில் தான் படங்களில் நடித்து வந்தார். 2010 ஆம் ஆண்டு வெளியான Kai Po Che என்ற படம் மூலம் இந்தி சினிமாவில் அறிமுகமானவர் சுஷாந்த் சிங் ராஜ்புத்.

சல்மான் கான் உருவ பொம்மைகளை எரித்த சுஷாந்த் ரசிகர்கள்

அதற்கு பிறகு இவர் பல படங்களில் நடித்து உள்ளார். எம்.எஸ் தோனியின் வாழ்கை வரலாற்று படத்தில் நடித்ததன் மூலம் தனெக்கென ஒரு பெரும் ரசிகர் பட்டாளத்தை சேர்த்தார். இந்நிலையில் நடிகர் சுஷாந்த் தற்கொலை செய்து கொண்டதை திரையுலக பிரபலங்களாலும், ரசிகர்களாலும் நம்ப முடியவில்லை. சுஷாந்த் இறந்ததற்கான காரணம் இன்னும் தெளிவாக தெரியவில்லை.

Advertisement

நடிகர் சுஷாந்த் சிங் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவருடைய மைத்துனரும், காவல்துறை அதிகாரியுமான ஓ.பி. சிங்கூறியிருந்தார். இதையடுத்து அவர் மும்பைக்கு வந்து இந்த வழக்கை விசாரிப்பதாக கடந்த சில நாட்களுக்கு முன்னர் தகவல் வெளியாகியுள்ளது.இந்த நிலையில் சுஷாந்த் சிங்கின் மரணத்திற்கு சல்மான் உள்ளிட்ட சில நடிகர்கள் தான் காரணம் என்று நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து வழக்கறிஞர் சுதீர் குமார் ஓஜா என்பவர் பீகார் கோர்ட்டில் வழக்குப்பதிவு செய்துள்ளார். அவர் தெரிவித்துள்ளதாவது, சுஷாந்த் சிங்க் மரணத்தில் பாலிவுட் பிரபலங்கள் சல்மான் கான்,கரண் ஜோகர், ஏக்தா கபூர், சஞ்சய் லீலா பன்சாலி உள்பட 8 பேருக்கு தொடர்பு இருப்பதாகவும் கூறி . சுஷாந்த் 7 படங்களில் இருந்து நீக்கப்பட்டு உள்ளார். இதுதவிர அவரது சில படங்கள்வெளியாகவில்லை . இதுவே அவர் தற்கொலை முடிவு எடுக்க காரணமாக இருக்கும். அவர்கள் திட்டமிட்டு சுஷாந்த்தின் பட வாய்ப்புகளை தடுத்ததால் அவர் மன உளைச்சலுக்கு ஆளானதாக புகார் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து  பிஹார் மாநிலம் பாட்னாவில் சுஷாந்த் ரசிகர்கள் சல்மான் கான் உருவ பொம்மைகளை எரித்தனர்.

Advertisement
Advertisement