தானே மாவட்டம் நவ்பாடா பகுதியில் தமிழ் பட நடிகைகளை விபசாரத்தில் ஈடுபடுத்தியவர்களிடம் மீட்டு போலீசார் காப்பகத்தில் ஒப்படைத்துள்ளனர். இந்தியாவில் கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக கொரோனா தாக்கத்தால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கிறது. கொரோனா பிரச்சனை காரணமாக பல்வேறு தொழில்கள் தொடங்கியது போலவே சினிமா தொழிலும் முடங்கியிருக்கிறது. சினிமாவை நம்பி இருக்கும் பல்லாயிரக்கணக்கான நடிகர் நடிகைகள் கலைஞர்கள் என்று பலர் கடந்த சில மாதங்களாக படப்பிடிப்புகள் இல்லாததால் கடும் வருமை நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறார்கள்.

இப்படி ஒரு நிலையில் தமிழ் பட நடிகைகளை விபசாரத்தில் ஈடுபடுத்தியவர்களிடம் மீட்டு போலீசார் காப்பகத்தில் ஒப்படைத்துள்ளனர். தானே மாவட்டம் நவ்பாடா பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் விபசாரம் நடப்பதாக குற்றப்பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. தகவல் அறிந்த போலீசார் போலி வாடிக்கையாளரை அனுப்பி சோதனை நடத்தினா். அவர்கள் சென்று பார்த்ததில் அந்த அடக்கு மாடி குடியிருப்பில் விபச்சாரம் நடைபெறுவது உறுதியாகியுள்ளது. இதையடுத்து போலீசார் அங்கு அதிரடி சோதனை நடத்தினர்.

இதையும் பாருங்க : கண்ணா கண்ணே சீரியலில் குடும்ப குத்து விளக்காக இருக்கும் நடிகையா இது – இப்படி ஒரு கிளாமர் உடையில்.

Advertisement

இந்தச் சோதனையின்போது இரண்டு பெண்கள் அந்த விபச்சார விடுதியில் இருந்து மீட்கப்பட்டனர் பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில் அந்த இரண்டு பெண்களும் தமிழ் மற்றும் தென்னிந்திய படங்களில் நடித்த நடிகைகள் என்பது தெரிய வந்துள்ளது அந்த இரண்டு நடிகைகளையும் போலீசார் நாம் பாகத்தில் ஒப்படைத்துள்ளனர் விபச்சாரத்தில் ஈடுபட்ட இந்த இரண்டு நடிகைகளும் கொரோனா பிரச்சினை காரணமாக பட வாய்ப்புகள் எதுவும் இல்லாமல் இருந்ததை அறிந்து இவர்களை விபச்சார கும்பல் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி வந்து உள்ளதாக தெரியவந்துள்ளது.

இந்த இரண்டு நடிகைகளையும் விபச்சாரத்தில் ஈடுபடுத்திய படத்திற்காக இரண்டு பெண்கள் மற்றும் விபசார தரகர்கள் இருவரையும் போலீசார் கைது செய்து உள்ளனர் மேலும் அவர்களிடமிருந்து ரூ.2 லட்சத்து 14 ஆயிரத்தையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். இதே போல இவர்கள் வேறு யாரையாவது விபச்சாரத்தில் ஈடுபடுத்தி இருக்கிறார்களா என்றும் விசாரணை நடந்து வருகிறதாம்.

Advertisement

Advertisement
Advertisement