சினிமா துறையை பொருத்தவரை ஒரு சில நடிகைகள் நடிக்க வருவதற்கு முன்பாக மாடல் அழகிகளாகவோ விளம்பரத்தில் நடித்த நடிகைகளாக தான் இருப்பார்கள். ஆனால், குத்துச்சண்டை மேடையில் அதிரடி பெண்ணாக இருந்து தற்போது சினிமாவில் கதாநாயகியாக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகை ரித்திகா சிங். தமிழில் 2016 ஆம் ஆண்டு நடிகர் மாதவன் நடிப்பில் வெளியான “இறுதி சுற்று” படத்தில் கதாநாயகியை நடித்தவர் நடிகை ரித்திகா சிங்.

அந்த படத்திற்கு பிறகு தமிழ், தெலுகு என்று ஒரு சில படங்களில் நடித்த இவர், தற்போது தனது உடலை மெருகேற்றிக்கொண்டு வருகிறார்.  23 வயதாகும் நடிகை ரித்திகா சிங் ஏற்கனவே மிக்சுடு மார்ஷல் அர்ட்ஸ் எனப்படும் குத்து சண்டை போட்டிகளில் கலந்து கொண்டவர். மேலும் அதில் இதுவரை ஒரே போட்டியில் மட்டும் தான் வெற்றிபெற்றுள்ளார். 2013 இல் இவரை ஒரு விமானப்பயணத்தின் போது கண்ட இறுதி சுற்றின் இயக்குனர் சுதா இவருக்கு நடிக்கும் வாய்ப்பை தருவதாக கூறியிருந்தார்.

Advertisement

அவர் கூறியது போலவே இவரை இறுதி சுற்று என்ற படத்தின் மூலம் சினிமா உலகதிற்கு அறிமுகம் செய்தார் இயக்குனர் சுதா.  இறுதி சுற்று படத்திற்கு பின்னர் தமிழில், விஜய் சேதுபதியுடன் ‘ஆண்டவன் கட்டளை’, லாரன்சுடன் ‘சிவலிங்கா’ போன்ற படத்தில் நடித்தார். தற்போது தமிழில் அரவிந்த் சாமி நடித்து வரும் ‘வணங்காமுடி’ படத்தில் துணை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

Advertisement

சமீபத்தில் கூட ரசிகர் ஒருவர் என்னை திருமணம் செய்து கொள்வீர்களா என்று கேட்டிருந்தார் அதற்கு பதிலளித்த ரித்திகா சிங் எனக்கு ஒரு கணவர் எல்லாம் பத்தாது எனக்கு நாலு ஐந்து கணவர்கள் வேண்டும் என்று கூறியிருக்கிறார் இதனைக் கேட்ட ரசிகர்களும் சாக்கடைந்துள்ளார்கள். இந்த புகைப்படத்திற்கு கீழ் பெரும்பாலான ரசிகர்கள் நூடுல்ஸ் மண்டை என்று கமெண்ட் செய்திருந்தனர்.

Advertisement

இதனை ஸ்கிரீன்ஷாட் எடுத்த ரித்விகா அவர் நடித்து வெளியாகி இருந்த ஓ மை கடவுளே என்ற ஹேஸ் டேகை போட்டு இருந்தார். மேலும் மற்றொரு பதிவில் என்னை அழ வைக்காதீர்கள் என்று பதிவிட்டிருந்தார் .அதேபோல ரித்விகாவின் பழைய வீடியோ ஒன்றில் என்னை யாராவது டூ மினிட்ஸ் மேகி என்று அழைத்தால். அது மேகி இல்லை என்னுடைய தலை முடி. என்னை நூடுல்ஸ் மண்டை என்று அழையுங்கள் அதுதான் என்னுடைய பெயர் என்று கூறியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement