தமிழக ஆளுநரை கைது செய்யும் அதிகாரம் தமிழக காவல்துறைக்கு உள்ளது- கே.எஸ். அழகிரி பரபரப்பு.

By S.Dhilip Kumar · 16/8/2023

தமிழக ஆளுநரை கைது செய்யும் அதிகாரம் தமிழக காவல் துறைக்கு உள்ளது என்று காங்கிரஸ் கட்சியை சேர்ந்த கே.எஸ். அழகிரி கூறியுள்ளார். அண்ணாமலையை கைது செய்ய கர்நாடக காவல்துறை தயாராக இருப்பதாக இளங்கோவன் கூறியிருந்தார். மேலும் கூறிய அவர் நீட் குறித்து ஆளுநர் வரம்பு மீறி பேசிவருகிறார். சட்டமன்றத்தில் அனைத்து கட்சிகளும் நீட் எதிர்ப்புக்கு நிறைவேற்றிய மசோதாவை ஒரு முறைக்கு இரண்டு முறை அனுப்பி வைத்தும் அதை நிறுத்தும் அதிகாரம் ஆளுநர்க்கு இல்லை என்று அவர் கூறியிருந்தார்.  

அழகிரி கூறியது:

ஆளுநர் எவ்வளவு அநாகரிகமானவர். எவ்வளவு அராஜகமானவர். அவர் ஆர் எஸ் எஸ் ஐ விட தீவிரமானவர் என்பது அவரது வார்த்தை மூலம் தெரிகிறது. நீட்டை நாம் தமிழகத்தில் அரசியல் காரணங்களுக்காக எதிர்க்கவில்லை அது தமிழக மாணவர்களுக்கு ஒத்து வராது. என்றால் தமிழகத்தில்  மாநில பாடத்திட்டம் தான் இருக்கிறது. நீட் தேர்வில் சிபிஎஸ்சி தொடர்பான கேள்விகள் கேட்கப்படுகிறது. படித்தது ஒன்று தேர்வு மற்றொன்று என்றால் எந்த ஒரு படித்த அறிஞர்களாலும் தேர்வு செய்ய முடியாது. 

அதனாலதான் தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியும் எங்களுடைய கூட்டணியும் முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களும் நீட் வேண்டாம் என்று சொல்கிறோம் ஒழிய வேற எதற்கும் இல்லை. ஒரு மாணவர் கூறியிருக்கிறார் நீட் தேர்வு எழுதுவதற்காக 25 லட்சம் ரூபாய் செலவு செய்துள்ளேன். ஏனென்றால் பயிற்சி கூடங்களுக்கு அளிக்க வேண்டியுள்ளது.  நீட்டைக் கொண்டு வந்ததால் இங்கு வணிகமயமாகிவிட்டது அதனால் தான் நாங்கள் நீட் வேண்டும் என்று சொல்கிறோம்.

ஒரு ஆளுநருக்கு என்ன அதிகாரம் இருக்குக்கிறது? அவர் எப்படி அப்படி சொல்லலாம். சட்டமன்ற முதல் தீர்மானத்தை கொண்டு வந்தது அதை எப்படி நிறுத்தி வைக்க முடியும். தீர்மானம் அனைத்துக் கட்சிகள் அதாவது ஏற்றுக்கொள்ளப்பட்டது அதை ஒருமுறைக்கு ஒரு முறை அனுப்பி மற்ற ஆளுநர் ஏற்றுக்கொள்ளாமல் இருப்பது எப்படி அவருக்கு அதுக்கான அதிகாரம் இல்லை.  நாளைக்கு மேல சென்றால் அவர் கைது செய்யப்படுவார். ஆளுநரை கைது செய்ய மாநில அரசுக்கு முழு உரிமை உள்ளது. அவரது எல்லாம் புரிந்து கொள்ள வேண்டும்.

மம்தா பானர்ஜியை சி பி ஐ கைது செய்து காவல் நிலையத்தில் உட்கார வைத்தார்கள். ஆளுநர் பேஸ் ஒரு தவறு செயலாற்றுவது தவறு அதனாலதான் எங்கள் கூட்டணி கட்சிகள் அனைத்தையும். அவருடைய தேநீர விருந்திற்கு  வரமாட்டோம் என்று கூறியிருந்தோம். ஆனால் அவர் மழையே பெய்யவில்லை மழையின் காரணமாக தேநீரில் இருந்தை ஒத்தி வைக்கிறோம் என்று கூறியிருந்தார். ஏனென்றால் விருந்து அண்ணாமலைக்கும் எடப்பாடிக்கும் கொடுப்பது அவருக்கு மகிழ்ச்சி இல்லை. எங்கள் கூட டீ குடித்தால் தான் அவருக்கு மகிழ்ச்சியாக இருக்கும். இன்றைக்கு நிகழ்ந்து கொண்டிருக்கிறது ஆளுநர் செய்வது தவறு” என்று கே.எஸ். அழகிரி கூறியிருந்தார்.    

Tamil Behind Talkies AMP · Quick view
View full