பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து நேற்று சரவணன் வெளியேற்றப்பட்டது தான் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு நடிகர் சரவணன் கல்லூரி காலத்தில் படிக்கும்போது பெண்களை பேருந்தில் உரசியுள்ளேன் என்று கூறி இருந்து கருத்து பெரும் சர்ச்சையாக பார்க்கப்பட்டது.

இதனால் சரவணனை பகிரங்கமாக மன்னிப்பு கேட்க சொன்னர் பிக் பாஸ். நீங்கள் பெண்கள் குறித்து பேசிய விடயம் மிகவும் கண்டிக்கப்படுகிறது. எனவே, நீங்கள் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறியிருந்தார். இதனால் சரவணன் மன்னிப்பும் கோரி இருந்தார். இருப்பினும் இத்தனை நாட்கள் கழித்து அவரை வெளியேற்ற என்ன காரணம் என்று பலரும் பல்வேறு விதமான காரணங்களை கூறி வருகின்றனர்.

Advertisement

இந்த நிலையில் சரவணன் கமலை தரக்குறைவாக பேசியதால் தான் வெளியேற்றபட்டார் என்று புதிய சர்ச்சை எழுந்துள்ளது. கடந்த சனிக்கிழமை நடந்த நிகழ்ச்சியில் கமல், லாஸ்லியாவிடம் கேள்வி கேட்டிருந்தார். அப்போது ஒசரவணன் ‘கோர்த்து விடுறான்’ என்று கூறியதால் தான் சரவணன் தற்போது வெளியேற்றபட்டுள்ளார் என்று கூறப்படுகிறது.

சரவணன் வெளியேற்றபட்டது குறித்து பலரும் பல்வேறு விதமான கருத்துக்களை தெரிவித்து வரும் நிலையில், தமிழ் நாடு திரையரங்க சங்கம், தனது ட்விட்டர் பக்கத்தில், சரவணன் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றபட்டது பெண்கல் உரிமைக்கு ஆதரவு அளிக்கும் வகையில் கண்ணை திறந்துள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement
Advertisement