சமீபத்தில் வெளியான ‘திரிஷ்யம் 2’  படத்தை பற்றி தமிழ் படம், தமிழ் படம் 2 போன்ற படங்களை இயக்கிய சி அமுதன் ட்வீட் ஒன்றை போட்டுள்ளார். சினிமாவுலகில் மிக பிரபல இயக்குனரான ஜீத்து ஜோசப் இயக்கத்தில் 2013 ஆம் ஆண்டு வெளிவந்த திரிஷ்யம் படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்தப் படத்தில் மோகன்லால், மீனா, பேபி எஸ்தர் உட்பட பல நடிகர்கள் நடித்திருந்தார்கள். இந்த படம் நல்ல வசூலையும், விமர்சனத்தையும் பெற்றுத் தந்தது. இந்த படத்தை கன்னடம், தெலுங்கு, தமிழ், இந்தி என 4 மொழிகளிலும் மறு ஆக்கம் செய்யப்பட்டது.

முதல் பாகம் முடிந்து ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு ‘திரிஷ்யம் 2’ படம் உருவாகியுள்ளது. படத்திலும் அதே 6 ஆண்டு இடைவெளிக்கு பின்னர் நடக்கும் கதையுடன் தான் துவங்குகிறது இந்த படம். சாதாரண கேபிள் ஆபரேட்டராக இருந்த மோகன்லால், இப்போது ஒரு தியேட்டர் உரிமையாளராக இருக்கிறார். தான் எழுதி வைத்திருக்கும் ஒரு கதையைப் படமாகத் தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்.இவர்களின் மூத்த மகள் அன்ஸிபா, முன்பு நடந்த கொலை சம்பவத்தில் இருந்து மீள முடியாமல் தவித்து வருகிறார். 

இதையும் பாருங்க : அழகிய தமிழ் மகன் படத்தில் வந்த குழந்தையா இது -ப்பா, வேற லெவல் Transformation. இதோ புகைப்படம்.

Advertisement

மோகன்லாலின் வளர்ச்சியால் பொறாமையில் இருக்கும் சிலர் கொலையை அவர்தான் செய்ததாகவே நம்புகின்றனர். இந்நிலையில், மோகன்லாலை மீண்டும் சிக்கவைக்க காத்திருக்கும் போலீஸுக்கு ஒரு துப்பு கிடைக்கிறது. இதனால் மீண்டும் சிக்கலில் மாட்டுகிறார் மோகன்லால்.இறுதியில் போலீசிடம் மோகன்லால் சிக்கினாரா? போலீஸ் விசாரணையை மோகன்லால் எப்படி எதிர்கொண்டனர்? இறுதியில் மோகன் லால் குடும்பம் தப்பித்ததா இல்லையா என்பது தான் கதை.

பொதுவாக இரண்டாம் பாகம் என்றால் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு இந்த படமும் ஒரு உதாரணம். முதல் பாகத்தில் இருந்த அதே சுவாரசியமும் விறுவிறுப்பும் இந்த படத்திலும் குறையவில்லை. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படத்தை தமிழ் ரசிகர்களும் கண்டு பாராட்டி வரும் நிலையில் இந்த படத்தை பற்றி தமிழ் படம் புகழ் இயக்குனர் சி எஸ் அமுதன் போட்ட பதிவு பெரும் கேலி பொருளாக மாறியுள்ளது.

Advertisement

‘திரிஷ்யம் 2’  படத்தை போலவே தமிழ் சினிமாவில் எண்ணற்ற படங்களில் 2ஆம் பாகம் வந்திருக்கிறது. ஆனால், அதில் பல படங்கள் முதல் பாகத்திற்கும் இரண்டாம் பாகத்திற்கும் சம்பந்தமே இல்லாமல் தான் இருக்கும். அதே போல தமிழ் படத்தை இயக்கிய சி எஸ் அமுதம் தமிழ் படம் 2 வையும் எடுத்தார். ஆனால், முதல் பாகம் போல இரண்டாம் பாகம் வெற்றியடையவில்லை. இப்படி ஒரு நிலையில் ‘திரிஷ்யம் 2’ பற்றி ட்வீட் செய்துள்ள சி எஸ் அமுதன் ” என்று பதிவிட்டு தன் படத்தோடு ‘திரிஷ்யம் 2’ வை ஒப்பிட்டு இருக்கிறார். இதை பார்த்த பலரும் சி எஸ் அமுதனின் நகைச்சுவை உணர்வை பாராட்டி வருகின்றனர்.

Advertisement
Advertisement