10ம் வகுப்பு மாணவன்..! காதலித்து அழைத்து வந்த கேரள ஆசிரியை போட்ட திட்டம்.!

By Ajju · 28/9/2018
கேரளா மாநிலம் கோழிக்கோட்டை சேர்ந்தவர் பெரோனா. இவர் கேரளா மாநிலம் ஆலப்புழா பகுதியில் உள்ள ஒரு தனியார் சி பி எஸ் இ பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்துள்ளார். இவருக்கு அதே பள்ளியில் பயிலும் 10 வகுப்பு பயிலும் மாணவனுக்கும் காதல் ஏற்பட்டுள்ளது. [embed]https://youtu.be/JsTiG1bTepQ[/embed] நீண்ட மாதங்களாக ரகசியமா இருவரும் காதலித்து வந்த நிலையில் இருவரும் மணிக்கணக்கில் தொலைபேசியில் உரையாடியுள்ளனர். இந்நிலையில் கடந்த 23 ஆம் தேதி மாணவனை காணவில்லை மாணவனின் பெற்றோர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். புகாரின் பேரில் பெரோனாவின் தொலைபேசி மூலம் அவர் மாணவனுடன் சென்னை சூலை மேட்டில் இருப்பதாக கண்டுபிடித்தனர். பின்னர் சென்னை வந்த கேரள போலீசார் சூலை மேடு போலீசாரின் உதவியோடு விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் பெரோனாவும் மாணவனும், தாய் மகன் என்று கூறிக்கொண்டு விடுதியில் நான்கு நாட்களுக்கு மேலாக தங்கியுள்ளதாக தெரியவந்துள்ளது. பின்னர் விடுதிக்கு சென்ற போலீசார் பெரோனாவை கைது செய்து மாணவனை மீட்டுள்ளனர்.
Tamil Behind Talkies AMP · Quick view
View full