நடிகை முக்தா பானு அவர்கள் 1991 ஆம் ஆண்டு கேரளாவின் கொளஞ்சேரி என்னும் ஊரில் பிறந்தவர். இவர் சிறு வயதில் இருந்தே சினிமா துறையில் நடித்து வருகிறார். ஆறாவது படிக்கும் போதே மலையாள சினிமாவில் நடித்தவர் பானு. அதற்குப் பிறகு 14 வயதில் ‘அச்சனுரங்காத வீடு’ என்னும் மலையாள படத்தில் ஹீரோயினியாக முதன் முதலாக சினிமாவிற்கு அறிமுகமானார். இயக்குனர் ஹரி இயக்கத்தில் 2007 ஆம் ஆண்டு வெளிவந்த படம் தாமிரபரணி. இந்தப் படத்தில் விஷாலுக்கு ஜோடியாக தமிழ் சினிமா உலகில் அறிமுகம் ஆனார் பானு. இவருடைய இயற்பெயர் எல்சா ஜியார்ஜ் என்பது ஆகும். ஆனால், இவர் பெயரை முக்தா என மாற்றி கொண்டார். மேலும், இவர் பெயர் மாற்றம் செய்தாலும் மக்கள் மனதிலும், ரசிகர்கள் மனதிலும் என்றைக்கும் தாமிரபரணி பானுவாக தான் இருக்கிறார்.

Advertisement

மேலும்,இவர் முதல் படத்திலேயே மக்களிடையே பிரபலமாக பேசப்பட்டார். இதனை தொடர்ந்து இவர் தமிழ் சினிமாவில் பட்டையைக் கிளப்புவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இவர் அழகர்மலை, மூன்று பேர் மூன்று காதல்,சட்டபடி குற்றம், பொன்னர்-சங்கர் என ஒரு சில படங்களில் மட்டும் நடித்தார். மேலும், இந்த படங்களும் பெரிய அளவில் வெற்றி கொடுக்கவில்லை. தாமிரபரணி படத்திற்கு பிறகு சரியான பட வாய்ப்புகள் இவருக்கு அமையவில்லை. அதனால், இவர் தமிழ் சினிமாவை விட்டு கொஞ்சம் நாள் விலகி இருந்தார். இதனால் இவர் மலையாளத்தில் அதிக கவனம் செலுத்த தொடங்கினார். பின் மலையாள மொழியில் பானு அதிக படங்களில் நடித்து வந்தார்.

இதுவரை இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளில் 30-க்கும் மேற்பட்ட படங்களில் கதாநாயகியாக நடித்து உள்ளார். மலையாள சினிமாவில் பிரபல பாடகி ரிமி டோமியின் சகோதரர் ரிங்கு டோமியை தான் 2015 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக ஒரு அழகான பெண் குழந்தை பிறந்து உள்ளது. அந்த குழந்தைக்கு கியாரா என பெயர் சூட்டி உள்ளார்கள். மேலும், நடிகை பானு அவர்கள் குடும்பத்துடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை பேஸ்புக்கில் அவ்வப்போது பகிர்ந்து வருகிறார். பின் ‘வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க’ படத்தில் சந்தானத்திற்கு ஜோடியாக நடித்தார்.

Advertisement

தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சந்திரகுமாரி’ என்ற சீரியலிலும் நடித்து வருகிறார். இது மட்டுமில்லாமல் இவர் கொச்சியில் ப்யூட்டி பார்லர் ஒன்றை நடத்தி வருகிறார். இவர் நடிகை மட்டுமல்லாமல் ஒரு கிளாசிக் டான்சர் ஆவார். அதோடு இவர் பல மேடைகளில் ஆடியும் உள்ளார். நடிகை பானு அவர்கள் திருமணம் ஆனாலும் சினிமா துறையில் இருந்து முழுமையாக ஒதுங்கவில்லை. திருமணத்திற்கு பிறகு தமிழில் வாய்மை, பாம்பு சட்டை உள்ளிட்ட படங்களில் சின்ன சின்ன கதாபாத்திரத்தில் நடித்தார். தற்போது தனது குடும்பத்தை பார்த்துக் கொண்டும், பட வாய்ப்புக்காக காத்துக் கொண்டிருக்கிறார் பானு.

Advertisement
Advertisement