தாடி பாலாஜி இப்படிப்பட்டவரா ? தன்னை விட்டு பிரிந்து போன மனைவிக்காக இப்படி செய்தாரா !

By Ajju · 27/2/2018
காமரடி நடிகர் தாடி பாலாஜிக்கும் அவரது மனைவி நித்யாவிற்கும் உள்ள மனக்கஷ்டங்கள் கோலிவுட்டை தாண்டி வீதிக்கு வந்த விஷயம் ஆகிவிட்டது. இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரச்சனை ஆகி போலீஸ் வரை சென்று தற்போது இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இருவருக்கும் 4 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்த குழந்தை தற்போது பாலாஜியின் மனைவி நித்யாவிடம் இருக்கிறார். ஒரு வழியாக பிரச்சனை இல்லமால், விவாகரத்து கோராமல் இருவரும் பிடித்து வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் பாலாஜி தன் மனைவி நித்யாவை பற்றி பெருமையாக பேசியுள்ளார். நித்யா மிகவும் நல்ல பெண். அவள் கடுமையாக உழைக்க கூடியவள். அவள் சம்பாத்தியத்தில் தான் சில காலம் குடும்பம் ஓடியது. ஒருநாள் என்னை புரிந்து கொண்டு அவள் என்னிடம் வந்துவிடுவாள் என்ற நம்பிக்கை என்னிடம் உள்ளது. அவள் என்னிடம் வர நான் பல கோவில் சென்று சித்தர்களை பார்த்து வேண்டி வருகிறேன். அவள் நன்றாக இருக்க வேண்டும். அவளுக்கு உதவும் மனப்பான்மை அதிகம். என தன் மனைவி நித்யாவைப் பற்றி கூறியுள்ளார் தாடி பாலாஜி.
Tamil Behind Talkies AMP · Quick view
View full