பிரபல நடிகரின் தந்தைக்கு மூன்று ஆண்டுகள் சிறை விதிக்கப்படலாம்? - உயர்நீதிமன்றம்

By Ashok · 31/12/2017
நடிகர் விஜயின் தந்தை ஸ்.ஏ சந்திரசேகர் சமீபகாலமாக சர்ச்சைகளில் அதிகமாக சிக்கி வருகிறார். விஜயின் மெர்சல் பட விவகாரத்தில் கூட முன்னுக்கு பின் முரணாக பேசி வாதத்தில் மாட்டிக்கொண்டார். அதேபோல் சமீபத்தில் நடந்த ஒரு திரைடப்ப விழாவில் , திருப்பதி கோயில் உண்டியலில் போடும் காசு இரு லஞ்சம் என பேசினார். இதனால் பல இந்து அமைப்புகள் அவருக்கு கண்டனம் தெரிவித்தது. இது குறித்து அவர் மீது வழக்கு தொடரவும் முடிவு செய்தது. முகாந்திரம் இருந்தால் வழக்கு தொடரலாம் என உயர்நீதிமன்றம் கூறியது. இதனால் சென்னை விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் இந்த சர்ச்சை பேச்சு குறித்து விஜயின் அப்பா எஸ்.ஏ சந்திர சேகர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு சர்ச்சை நிரூபணம் ஆனால். மற்ற மதத்தினரை புண்படும் படி பேசியதால் IPC 295ன் படி விஜயின் அப்பா சந்திர சேகருக்கு 3 ஆண்டுகாலம் வரை சிறை தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளது.
behindtalkies AMP · Quick view
View full