தன்னுடைய சொந்த வீட்டில் பொது மக்களுக்கு இடம் கொடுத்த லெஜெண்ட் சரவணனுடைய புகைப்படம் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழகத்தில் மிகப் பிரபலமான தொழிலதிபராக திகழ்பவர் லெஜெண்ட் சரவணன். இவரை தெரியாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். சரவணா ஸ்டோர்ஸ் விளம்பரம் மூலம் ரசிகர்கள் மத்தியில் அதிகம் பேசப்பட்டவர் சரவணன் அருள். தனது சொந்தக் கடை விளம்பரத்தில் தானே நடித்து பிரபலம் தேடிக் கொண்டவர் சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் அருள்.

மேலும், இவர் தனது கடையின் விளம்பரங்களில் ஹன்சிகா, தமன்னா போன்ற முன்னணி நடிகைகளுடன் தோன்றி நடித்தார். இதனால் அவரை பலரும் உருவ கேலி செய்து கலாய்த்து தள்ளினர். அதை எல்லாம் கண்டுகொள்ளாத சரவணன் அடுத்த கட்டமாக படங்களில் நடிக்கும் ஆசையில் தானே படநிறுவனத்தை தொடங்கி “தி லெஜெண்ட்” என்ற படத்தில் நடித்தார். இந்த படத்தை ஜேடி – ஜெர்ரி இயக்கி இருந்தார்கள். இந்த திரைப்படத்திற்கு ஹாரிஷ் ஜெயராஜ் இசையமைத்திருக்கிறார். மிக பிரம்மாண்டமான பொருட் செலவில் இந்த படம் எடுக்கப்பட்டிருந்தது.

Advertisement

தி லெஜன்ட் படம்:

இந்த படத்தில் அருள் அண்ணாச்சிக்கு ஜோடியாக புதுமுகம் கீத்திகா திவாரி நடித்து இருக்கிறார். இவர்களுடன் இந்தப் படத்தில் பிரபு, விவேக், விஜயகுமார், நாசர், படத்தில் ராமையா, விவேக், வெங்கட், மயில்சாமி, லதா, கோவை சரளா, தேவி மகேஷ் உள்ளிட்ட பல நடிகர்கள் நடிகர்கள் நடித்து இருக்கிறார்கள். மேலும், படத்தில் வேல்ராஜ் ஒளிப்பதிவாளராகவும், எடிட்டராக ரூபனும் பணிபுரிந்து இருக்கிறார்கள். அதிக எதிர்பார்ப்புடன் தி லெஜன்ட் திரைப்படம் ஜூலை 28ஆம் தேதி வெளியாகி இருந்தது.

தி லெஜன்ட் படம் விமர்சனம்:

இந்த படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட பல மொழிகளில் பான் இந்திய படமாக வெளியாகி இருந்தது. இந்த படத்தின் மூலம் சரவணன் அருள் அவர்கள் ரசிகர்கள் மத்தியில் வேற லெவல்ல ட்ரெண்டிங் ஆகி இருக்கிறார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று இருக்கிறது. இந்த படத்தை தொடர்ந்து சரவணன் அவர்கள் தன்னுடைய அடுத்த படத்திற்கான வேலையில் மும்முரமாக இருக்கிறார். அந்த படமும் கமர்சியல் படமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

Advertisement

லெஜெண்ட் சரவணன் புகைப்படம்:

தற்போது இவர் நடிக்கும் படம் ரொமான்ஸ் கதை அம்சத்தைக் கொண்டதாக கூறப்படுகிறது. அது மட்டும் இல்லாமல் இந்த படத்தில் சரவணன் அருள் யூத் ஆக நடிக்கிறாராம். இதனால் சரவணன் அண்ணாச்சி அவர்கள் பயங்கரமாக ஒர்க் அவுட் செய்து உடல் எடையை குறைத்து இருக்கிறார். இது ஒரு பக்கம் இருக்க, லெஜெண்ட் சரவணன் எப்போதுமே சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கிறார். இவர் தான் அடிக்கடி எடுக்கும் புகைப்படங்களை சோசியல் மீடியாவில் பகிர்ந்து வருகிறார்.

Advertisement

சரவணன் வீட்டில் அன்னதானம்:

அந்த வகையில் தற்போது லெஜெண்ட் சரவணன் பதிவிட்டிருக்கும் புகைப்படம் சோசியல் மீடியாவில் பயங்கர ட்ரெண்டிங் ஆகி வருகிறது. அதாவது, 24 மணி நேரமும் அன்னதானம் நடைபெறுகிறது. என்னுடைய சொந்த வீட்டில் பொது மக்களுக்கும் இடம் எப்போதும் உண்டு என்று கூறி ஒரு புகைப்படத்தை சரவணன் பதிவிட்டு இருக்கிறார். எதற்காக இந்த அன்னதானம் என்று தெரியவில்லை? தற்போது லெஜெண்ட் சரவணன் பதிவிட்டிருக்கும் புகைப்படம் தான் சோசியல் மீடியாவில் பயங்கர ட்ரெண்டிங் ஆகி வருகிறது.

Advertisement