50 வயசானவங்க சுகர் பத்தி பேச சொல்ல படத்தை ரெடி பண்ணிட்டாங்க போல - லெஜண்ட் படத்தை வச்சி செய்த ப்ளூ சட்டை.

By Ajju · 29/7/2022

தி லெஜன்ட் என்ற திரைப்படத்தில் நாயகனாக நடித்திருக்கும். ஜேடி – ஜெர்ரி இயக்கியுள்ளனர். அந்த திரைப்படத்திற்கு ஹாரிஷ் ஜெயராஜ் இசையமைத்திருக்கிறார். மிக பிரம்மாண்டமான பொருட் செலவில் இசையமைத்திருக்கிறார். எடுக்கப்பட்டிருக்கும் திரைப்படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் வெளியாகி சமூக வலைதளத்தில் வைரலாகின. இந்த நிலையில் படத்தை ஜூலை மாதம் வெளியிட பட குழுவினர் திட்டமிட்டிருந்தனர். அதற்கான வேலைகள் நடைபெற்று வந்தன. இந்த நிலையில் தி லெஜன்ட் திரைப்படம் ஜூலை 28ஆம் தேதி திரையரங்குகள் வெளியாகிறது என அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கின்றனர். அந்தப் படத்தை தமிழகத்தில் மதுரை அன்புச் செழியன் வெளியிடுகிறார். அதற்கான அறிவிப்பை சரவணா ஸ்டோர் அண்ணாச்சி மற்றும் அன்பு செழியன் இணைந்து வெளியிட்டனர். இந்த திரைப்படத்தில் அண்ணாச்சியுடன் ஊர்வசி உஜ்வாலா நாயகியாக நடித்துள்ளார். அதேபோல் மறைந்த நடிகர் விவேக் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

படத்தின் சாதனைகள் :-

மேலும், “என் கணிப்பின்படி முதல் படத்திலேயே உச்ச நட்சத்திரங்கள் வரிசையில் லெஜண்ட் சரவணன் இணைகிறார்” என்று பாராட்டி, நிச்சயம் இப்படம் மாபெரும் வெற்றி பெறும் எனக் இப்படம் அதிக முன் பணம் கொடுத்து தமிழகம் முழுவதும் வெளியிடும் உரிமையை பெற்றிருக்கிறார். அதன்படி, தமிழகம் எங்கும் 800க்கும் அதிகமான திரையரங்குகளில் ‘தி லெஜண்ட்’ திரைப்படத்தை அவர் வெளியிட இருக்கிறார். முதல் படத்திலியே அதிக பணம் கொடுத்து பெறப்பட்ட படம் மற்றும் 800க்கும் அதிகமான திரையரங்குகளில் வெளியாகும் படம் என்கிற பெருமை லெஜண்ட் சரவணனுக்கு மட்டுமே கிடைத்துள்ளது என்று கோலிவுட்டில் பேச்சு எழுந்திருக்கிறது. தமிழகத்தை போல மற்ற மொழிகளிலும் அதிக திரையரங்குகளில் வெளியாகும் என வெளிநாடு மற்றும் அனைத்து மொழிகளில் வெளியீட்டு உரிமையை வாங்கிய விநியோகஸ்தர்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர்.

அதிகாலை காட்சியில் பெரும்மளவிளான திரையரங்கம் ஹவுஸ்புல் :-

இந்த கடையின் உரிமையாளர் அருள் சரவணன், தனது கடையின் விளம்பரங்களில் ஹன்சிகா தமன்னா போன்ற முன்னணி நடிகைகளுடன் தோன்றி நடித்தார். இதனால் அவரை பலரும் உருவ கேலி செய்து கலாய்த்து தள்ளினர். அதைப்பற்றி எல்லாம் கண்டுகொள்ளாத சரவணன் அடுத்த கட்டமாக படங்களில் நடிக்கும் ஆசையில், சரவணா ஸ்டோர்ஸ் ப்ரோடக்ஷன்ஸ் என்ற பெயரில் தானே ஒரு தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி “தி லெஜெண்ட்” என்ற படத்தில் நடித்தார். சமீபத்தில் அந்த படத்தின் டீசர் ட்ரெய்லர் என வெளியாகி முப்பது மில்லியன் பார்வையாளர்களை கடந்து சென்று கொண்டிருந்த நிலையில், படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது. இந்த நிலையில் இன்று உலகம் முழுவதும் 2500 தியேட்டர்களிலும் தமிழகத்தில் மட்டும் 800 தியேட்டர்களிலும் ஐந்து மொழிகளில் இந்த படம் வெளியாகி உள்ளது. படத்தை பார்க்க வேண்டும் என்ற ஆவலில் காலை நான்கு மணி காட்சிகள் எல்லாம் சுமார் 650 தியேட்டர்கள் நிரம்பி வழிந்தன.

படம் பார்த்த பொதுமக்கள் மற்றும் தனியார் யூடியுப் சேனல் கூறியது :-

அதிகாலை காட்சியை பார்த்துவிட்டு பலரும் விமர்சனங்களை பகிர்ந்து வருகின்றனர். கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது தி லெஜன்ட் படம். சிலர் அண்ணாச்சியின் முயற்சியை பாராட்டி இருக்கின்றனர். சிலர் அவர் நடிப்பை கழுவி ஊற்றி வருகின்றனர். உங்கள் நண்பர்கள் குழு உடன் போங்கள், சத்தமாக சிரியுங்கள், இந்த படம் மிகப்பெரிய ஸ்ட்ரெஸ் பஸ்டர், உங்களால் சிரிப்பை அடக்கவே முடியாது என்று நெட்டிசன்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர். படம் பார்த்துவிட்டு வெளியே வந்த பலரும் படம் சுமாராக இருக்கிறது என்று பலரும் கூறி வருகின்றனர்.

https://twitter.com/cinephileoffl/status/1552556463687892992

மேலும், பல இடங்களில் போர் அடிப்பதாகவும், 3 மணி நேரம் நன்றாக தூங்கலாம் என்றும் கருத்து கூறினர். சிலர் பாடல்கள் மட்டுமே நன்றாக இருக்கிறது. ஆக்சன் காட்சிகளில் சிரிப்பு தான் வருகிறது என்றும் கூறினர். அதிலும் ஒரு தனியார் யூடியுப் சேனல் தொகுப்பாளர் செல்கிறார். " ஜட்டி என்பது உள்ளே போடும் உள்ளாடை பட்டுவில் ஜட்டி செய்யப்பட்டிருக்கு என தலையில் போட முடியுமா " என கேட்டிருந்தார்.

https://www.youtube.com/watch?v=4-tXLZGQZzE

படத்தை வாங்க வந்தவர்கள் விலையை கேட்டு ஒடினார்கள் :-

அது என்னவென்றால் அந்தப் படத்தின் டிரைலர் சுமார் 26 மில்லியன் பார்வையாளர்களை பெற்று உள்ளது. மேலும், நடிகர் அஜித்தின் நடிப்பில் வெளிவந்த வலிமை திரைப்படத்தின் டிரைலர் வெறும் 24 மில்லியன் பார்வையாளர்கள் மட்டுமே பெற்றுள்ளது. அதிலும் குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் வலிமை திரைப்படம் வந்து கிட்டத்தட்ட ஐந்து மாதங்கள் ஆகிவிட்டது. இவ்வாறாக சமூகவலைத்தளங்களில் வைரலான படமாக இருந்து வந்த “தி லெஜெண்ட்”படம் தற்போது ரிலீஸ்ஸிற்கு தயாராகி வருகிறது. படத்தை அதிக விலைக்கு விற்று லாபத்தை பார்த்து விட வேண்டும் என அண்ணாச்சி திட்டம் போட்டுள்ளார். அதனால் படத்தை வாங்க வந்தவர்களிடம் அதிக விலையை கேட்டுள்ளார். ஆனால் படத்தை வாங்க வந்தவர்கள் எந்த ஒரு பதிலும் கூறாமல் வந்த வழியே திரும்பி சென்று கொண்டிருக்கிறார்கள்.

behindtalkies AMP · Quick view
View full