மெர்சல் படத்தின் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் திரையரங்க உரிமையாளர் எடுத்த முடிவு.

By Ashok · 29/10/2017
மெர்சல் படம் வெளியாகி இன்றுடன் 10 நாட்களுக்கு மேல் ஆகிறது. வசூலில் அடுத்தடுத்து சாதனை படைத்து வரும் மெர்சல் தமிழின் முதல் 200 கோடி வசூல் செய்த படமாகவும் சாதனை படைக்கும் எனவும் கூறப்படுகிறது. தற்போது சனி மற்றும் வார இறுதி நாட்களில் தியேட்டர்களில் கூட்டம் அலைமோதிக்கொண்டிருக்கிறது. இதன் காரணமாக கூட்டத்தை சரியாக அக்கமடேட் செய்ய தியேட்டர் உரிமையாளர்கள் பரிதவித்து வருகின்றனர். அதே வேலையில். வெற்றி திரையரங்க உரிமையாளர் ராகேஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் இன்று காட்சிகள் அனைத்தும் ஹவுஸ் புல். ஆனதால், காலையில் ஒரு ஷோ கூடுதலாக திரையிடப்பட்டதாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும், தற்போது பெண்கள் மெர்சல் படம் பார்க்க அதிகமாக வருவதாகவும் பதிவிட்டுள்ளார்.
behindtalkies AMP · Quick view
View full