மெர்சல் பட அனுமதி பற்றிய இறுதி செய்தி, தளபதி ரசிகர்கள் கொண்டாட்டம்!

By Ashok · 16/10/2017
மெர்சல் படத்தில் புறாவை வைத்து எடுக்கப்பட்ட காட்சி கிராபிக்ஸ் என் ஆதாரம் தராததால் விலங்குகள் நல வாரியம் படக்குழுவிற்கு நோட்டிஸ் அனுப்பி இருந்தது. இது சம்மந்தமான மீட்டிங் இன்று காலை 10 மணி முதல் நடந்து வந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது அது சம்மந்தமான நிபந்தனைகள் நிறைவேற்றப்பட்டு படத்திற்கு அந்த புறா காட்சிகளுக்கு 'ஆட்சேபனை இல்லை ' ஒளிபரப்பிக்கொள்ளாளம் என்ற NOC - நோ அபிஜக்சன் சான்றிதலை கொடுத்துள்ளது விலங்குகள் நல அமைபோது வாரியமான AWBI. இதனால் நாளை மறுநாள் மெர்சல் ஓடம் வெளியாவது உறுதியாகி உள்ளது. நேற்று விஜய் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்த பின் இது போன்ற ஒரு நல்ல முடிவு கிடைத்துள்ளது. என்னவாயினும் தற்போது இந்த வெற்றியை தளபதி ரசிகர்கள் ஆரவாரத்துடன் கொண்டாடி வருகின்றனர். இதனால் படத்தில் எந்த ஒரு காட்சியும் கட் செய்யப்படாமல் அப்படியே வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. படத்தின் மொத்த ரன் டைம் 2 மணி நேரம் 47 நிமிடங்கள் ஆகும். இதனால் உற்சாகத்தில் உள்ள படக்குழு டிக்கெட் முன்பதிவு சம்மந்தமான வேலைகளை முடுக்கியுள்ளது.
Tamil Behind Talkies AMP · Quick view
View full