மெர்சல் படம் வெளியாகி பல பிரச்சனைகள் மற்றும் தடைகளுக்குப் பிறகு வெற்றி பெற்றது குறிபிடத்தக்கது. தற்போது பாடகர் ஶ்ரீனிவாஸ் படத்தினைப் பற்றி விமர்சனம் கலந்த பாராட்டினை தெரிவித்துள்ளார்.

Advertisement

அவர் தனது முகநூல் பக்கத்தில் நேற்று பதிவிட்ட அந்த போஸ்ட் மெர்சல் படத்தினை அலசி ஆராய்ந்து ஒரு விமர்சகர் போல் பதிவிட்டிருந்தார்.

“மெர்சல் படத்தினை ஒரு வழியாக பார்த்துவிட்டேன், மெர்சல் சுத்தமாக ஒரு லாஜிக்கே இல்லாத படம், வழக்காமான கமர்சியல் படங்களைப் போல் தான் இதுவும் இருந்தது. படம் எனக்கு பிடித்திருந்தது, மசாலா படமானாலும் சற்று லாஜிக்கோடு இருந்திருக்க வேண்டும்.

Advertisement


ஆனால், பல நல்ல செய்திகளை படம் சொல்லியிருக்கிறது. மருத்துவத்துறையின் வணிகமயத்தை படம் சொல்லியிருக்கிறது. வரிகளை பற்றி படம் எடுக்கும் போது நன்றாக சரியான தரவுகளைத் தர வேண்டும்.

Advertisement

மேலும், இலைஞர்கள் நாட்டின் மருத்துவத்துறையில் உள்ள கரப்சனை களைய முயற்சி எடுக்க வேண்டும்,”

என பதிவிட்டிருந்தார்.

Advertisement