சினிமாவைப் பொருத்தவரை உச்ச நட்சத்திரங்களாக இருக்கும் நடிகர் நடிகைகள் மட்டும்தான் சொகுசான வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார்கள். ஆனால், துணை நடிகர்களாக இருக்கும் எத்தனையோ, மக்களுக்கு பரிட்சயமான நடிகர்களின் வாழ்க்கை எப்போதும் சோகத்தில் தான் முடிகிறது. அந்த வகையில் தமிழில் எண்ணற்ற படங்களில் நடித்த நடிகர் பெஞ்சமின் சிகிச்சைக்கு உதவி கேட்டு வீடியோ வெளியிட்டுள்ளார். தமிழில் திருப்பாச்சி, வசூல் ராஜா MBBS , வெற்றிக்கொடி கட்டு போன்ற பல்வேறு படங்களில் நடித்தவர் நடிகர் பெஞ்சமின். மேடை நாடக கலைஞரான இவரை வெற்றிக்கொடிக்கட்டு படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகப்படுத்தினார் இயக்குநர் சேரன்.

அதிலும் வெற்றிக்கொடி கட்டு படத்தில் வடிவேலுவை இவர் திட்டி தீர்த்து துபாயம் துபாய் என்று பேசிய வசனம் இன்றளவும் பேமஸ் தான். 40க்கும் மேற்பட்ட தமிழ் படங்களில் காமெடி வேடத்தில் நடித்து தமிழ் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார். இப்படி ஒரு நிலையில் தனக்கு இறுதியை சிகிச்சை செய்ய வேண்டும் என்று அதற்கு தன்னிடம் போதுமான பணம் இல்லை என்றும் மக்களிடம் உதவி கேட்டு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இதையும் பாருங்க : என்னது, மறுபடியும் காதலா ? மீண்டும் ஷாக் கொடுத்த வனிதா. நீங்களே பாருங்க.

Advertisement

அதில், நான் பெஞ்சமின் பேசுகிறேன், ஆர்டர் அட்டாக் வந்து சேலத்தில் 2, 3 நாள் சிகிச்சை எடுத்தேன். அங்கே அறுவை சிகிச்சை செய்யும் அளவிற்கு வசதி இல்லை. எனவே, பெங்களூரு நாராயண இருதய மருத்துவ மனைக்கு கொண்டு செல்ல சொல்லி இருக்கிறார்கள். பெங்களூர் போய் இருக்கோம் இப்பொழுது பெங்களூர் சென்று கொண்டு இருக்கிறோம் எவ்வளவு செலவாகிறது என்னவென்பது தெரியவில்லை. நண்பர்கள் உங்களுக்கு தெரிந்த மருத்துவ உதவி செய்யக்கூடிய நண்பரிடம் சொல்லி ஏதாவது மருத்துவ உதவி செய்ய வேண்டுமாய் அன்புடன் கேட்டுக்கொள்கின்றேன் நன்றி என்று கூறி உள்ளார்.

அதேபோல பெஞ்சமின் இந்த நிலை குறித்து பேசிக் கொள்ள லோல்லு சபா பழனியப்பன், நடிகர் பெஞ்சமின் நடிகர் சங்கத்திலும் சின்னத்திரை டப்பிங் சங்கத்திலும் இருக்கிறார். திருப்பாச்சி படத்தில் விஜய்க்கு நண்பராகவும் ஆட்டோகிராப் படத்தில் சேரனுக்கு நண்பராகவும் நடித்தவர். 100-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த அவருக்கு இரண்டு நாட்களுக்கு முன்னர் ஹார்ட் அட்டாக் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதித்து இருந்தார்கள். அதன் பின்னர் பெங்களூருக்கு கொண்டு சென்று இருக்கிறார்கள். அவருக்கு போதுமான அளவு பணம் இல்லை எனவே நண்பர்கள் உங்களால் முடிந்த 100,200,500, 1000 என்று பண உதவியை செய்து ஒரு கலைஞனை காப்பாற்றுங்கள் என்று கூறியிருக்கிறார்

Advertisement
Advertisement