விஜய் டீவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி நல்லபடியாக முடிந்து தற்போது எல்லோருமே அவரவர் துறைகளில் பிசியாகிவிட்டனர்.
இந்நிலையில் கிட்டத்தட்ட 80நாட்கள் பிக்பாஸ் வீட்டிலிருந்து பின்னர் நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றப்பட்டவர் வையாபுரி.
பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் அவரது வாழ்க்கையே மாறிவிட்டது எனலாம்.
அவரது குடும்பமே தற்போது சந்தோசத்தில் திளைத்து வருகின்றது.
பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னரான தன்னுடைய திரைப்பயணத்தை சுந்தர்.சி இயக்கும் கலகலப்பு இரண்டாம் பாகத்தின் மூலமாக தொடரவுள்ளார் வையாபுரி.
இந்தப்படத்தில் முக்கியமான ரோலில் நடிக்க கமிட் ஆகியுள்ளாராம் வையாபுரி.