பாகுபலி படத்திற்கு பிறகு வரலாற்றை மையமாக கொண்டு உருவாகும் படங்கள் அதிகமாகி வருகின்றன. தற்போது தெலுங்கு நடிகர் மெகா ஸ்டார் சிரஞ்சீவி ஹீரோவாக நடிக்க ‘சைரா நரசிம்ம ரெட்டி’ என்ற ஒரு படம் தயாராகிறது.

Advertisement

இந்த படம் பாகுபலி போல் ஒரு பெரும் பொருட்செலவில் உருவாகவுள்ளது. படத்திற்காக இந்தியாவின் பெரிய நடிகர்கள் எல்லாம் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். நடிகர்கள் சிரஞ்சீவி, அமிதாப்பச்சன், சுதீப், விஜய், ஜெகபதி பாபு, நயன்தாரா என ஒரு பெரும் நட்சத்திர பட்டாளமே நடிக்கிறது.

இந்த சரித்திர படத்தில் விஜய் சேதுபதிக்கு ஒரு மிக முக்கியமான கேரக்டர் கொடுக்கப்பட்டுள்ளது. சரித்திர கதையின் ஹீரோவான சிரஞ்சீவி ‘சைரா நரசிம்ம ரெட்டியின்’ வலது கையாக நடிக்கவுள்ளார் விஜய் சேதுபதி. இந்த காதபாத்திரத்தின் பெயர் ‘ஒப்பாயா’

Advertisement

Advertisement

பாகுபலிக்கு ஒரு கட்டப்பா போல சைராவுக்கு ஒப்பாயா கேரக்டர் இருக்கும் என கூறப்படுகிறது. முதன் முறையாக சரித்திர படத்தில் நடிக்கவிருக்கும் சேதுபதியின் நடிப்பை பார்க்க அவரது ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர்.

Advertisement