எவ்வளவு சிரமம்னு இப்போ தான் தெரிஞ்சிகிட்டேன் - டிக் டாக் இலக்கியா.

By Rajkumar · 11/3/2021

சமூக வலைதளத்தின் மூலம் பல்வேறு நபர்கள் பிரபலமாகியுள்ளனர். அந்த வகையில் இளைஞர்கள் மத்தியில் டிக் டாக், மியூசிக்கலி மற்றும் டப்மாஸ் போன்ற ஆப்கள் பெரும் மோகத்தை ஏற்படுத்தி இருந்தது. அதில் பெண்கள் சிலர் ஆபாசமாகவும் ஆண்கள் விதவிதமான வீடியோக்களை பதிவு செய்து வருகிறார்கள். இந்த விடீயோக்கள் மூலம் லட்சக்கணக்கில் லைக் பெறுவதும் உண்டு. இந்த அற்ப லைக்குக்கு ஆசைப்பட்டு இக்கால இளைஞர்கள் டிக் டாக் போன்ற ஆப்களில் விதவிதமான வீடியோக்களை பதிவு செய்து வந்தனர்.

அப்படி கவர்ச்சியான வீடியோகள் மூலம் டிக் டாக்கில் பிரபலமடைந்தவர் தான் இலக்கியா.சமீபத்தில் கூட தனக்கு பட வாய்ப்பு தருவதாக கூறி தன்னை ஆசைக்கு இணைய வைத்து பின்னர் ஏமாற்றி விட்டதாக கூறி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தார் இலக்கியா.இப்படி ஒரு நிலையில் டிக் டாக் இலக்கியா கதாநாயகியாக அறிமுகமாகியுள்ளார். அலெக்சாண்டர் ஆறுமுகம் என்ற அறிமுக இயக்குனர் எடுக்க உள்ள 'நீ போடத்தான் வந்தியா' என்ற படத்தில் இலக்கிய கதாநாயகியாக அறிமுகமாக இருக்கிறார்.

இந்த படத்தில் கலக்கப்போவது யாரு புகழ் தீனா, ரஞ்சினி, அர்ச்சனா பிரியா என்று பலர் நடிக்கிறார்கள். இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தை போல ஒரு ஹாரர் அடல்ட் காமெடி படமாக இந்த படம் உருவாக இருக்கிறதாம். கடந்த சில தினங்களுக்கு முன்னர் இந்த படத்தின் போஸ்டரை வெளியிட்டு இருந்தார் இலக்கியா. இப்படி ஒரு நிலையில் இந்த படத்தின் இசை வெளியிட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது.

இந்த விழாவில் பேசிய இலக்கியா, சினிமாவில் நடிக்க வேண்டும் என்பதுதான் என் கனவு. அது இப்போது நிறைவேறி இருக்கிறது.உண்மையில் படம் நடிக்க வேண்டும் என்று எனக்கு ஆசை இருந்ததே தவிர படப்பிடிப்பில்தான் அது எவ்வளவு சிரமம் என்று புரிந்தது. சினிமா எவ்வளவு சிரமம் என்பதை தெரிந்து கொண்டேன். நல்ல படங்களில் நடிக்க வேண்டும் என்ற ஆசை இருக்கிறது என்று கூறியுள்ளார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full