அமைச்சர் செந்தில் பாலாஜியின் மீது அமலாக்கத்துறையின் வழக்கு சென்னை முதன்மை நீதிமன்றத்தில் இருந்து தற்போது வேறு அமர்வு நீதி மன்றத்திற்கு மற்றப் பட்டுள்ளது. செந்தில் பாலாஜி வழக்கில் அமலக்காதுறை விசாரனைக்கு அவர் ஒத்துவிழிக்க வில்லை என்று அமலாக்க துறை தெரிவித்து இருந்தது. தற்போது இவரை பணியிட மாற்றம் செய்துள்ளதால் இது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இவர் அமைச்சரின் வழக்கை 2 ஆண்டுக்களாக விசாரணை அதிகாரியாக இருந்து வந்துள்ளார்.   

அமைச்சரின் வழக்கு:

கடந்த அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறையில் வேலை வாய்ப்பு வாங்கி தருவதாக ஏமாற்றி விட்டார் என சில பேர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். அதன் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டார். தொடர்பாக அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கதுறை கைது செய்த நிலையில் அவரை விடுவிக்க கோரி அவரது மனைவி மேகலா தொடர்ந்த ஆட்கொணர்வு மனு விசாரித்த இரு நீதிபதிகள் அமர்வு வெவ்வேறு தீர்ப்பினை வழங்க வழக்கு மூன்றாவது நீதிபதிகள் அமர்வுக்கு சென்றது. மூன்றாவது அமர்வு அவர் கைது செய்யப்பட்டது சட்டத்திற்கு உட்பட்டு தான் என்றும் அவர் குணமடைந்த பிறகே அவரை விசாரிக்கலாம் என்றும் தீர்ப்பு வழங்கின.

Advertisement

நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு:

இரவு 8 மணியளவில் புழல் சிறையில் இருந்து அமலாக்க துறையி.னரால் நுங்கம்பாக்கத்தில் உள்ள சாஸ்திரி பவனிற்கு அவரை விசாரனைக்காக அவரை அழைத்து சென்றது. அவரிடம் விசாரணை ஆரம்பித்தது தகவல்கள் தெறிவிக்கின்றன. மேலும் அவருக்கு இரண்டு முறை மருத்துவ பரிசோதனை நடத்த வேண்டும் எனவும் உத்தரவு அளிக்கப்பட்டுள்ளது. இன்று காலையே மருத்துவ குழு வந்து அவரை பரிசோதித்து விட்டு சென்ற நிலையில் தற்போது விசாரணை தொடங்கியுள்ளதாக தெரிவிக்கின்றன.

குற்றப்பத்திரிகையில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் பெயர் மட்டுமே இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 120 பக்கங்களுக்கும் மேற்பட்ட குற்ற பத்திரிகை மற்றும் 2700 ஆவணங்களை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மேலும் இரண்டு பக்கமும் காவலர்களுடன் நீதிமன்றம் வந்தடைந்த அமைச்சர் செந்தில்

Advertisement

வேறு அமர்வுக்கு மாற்றம்:

செந்தில் பாலாஜியின் இந்த வழக்கை சென்னை முதன்மை நீதிமன்றம் விசாரித்து வந்த நிலையில் இந்த வழக்கை எம்.பி மற்றும் எம்.எல்.எக்களை விசாரிக்கும் சிறப்பு நீதி மன்றத்திற்கு மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இதனை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லிஉத்தரவிட்டுள்ளார். இந்த வழக்கானது ஆகஸ்ட் 28 அன்று விசாரணைக்கு வருகிறது.

Advertisement

அமலாக்க துறை கூறுகையில் “போக்குவரத்து துறையில் வேலைக்காக பணம் வாங்கப்பட்டதை பற்றி வங்கி கணக்கு மற்றும் அவரின் மனனவி வங்கி கணக்குகளை வைத்து வரவு வரபட்டது மற்றும் அவருக்கு எதிரான ஆதாரங்களை வைத்து கேள்விகளை எழுப்பினோம். ஆனாலும் அவர் அந்த கேள்விகளுக்கு ஒத்துழைப்பு வழங்கவில்லை மேலும் அவர் உண்மைகளை மறைக்கும் நோக்கில் செயல்பட்டார்” என்றும் தெரிவித்தனர்.      

Advertisement