அட்லீ இயக்கத்தில் தளபதி விஜய் நடித்துள்ள மெர்சல் படத்தின் டீஸர் வெளியாகி பட்டையை கிளப்பியது. அதோடு ஏ. ஆர். ரகுமான் இசையில் ,அந்த படத்தின் பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட் ஆனது.

இந்த நிலையில் அந்த படத்திற்கு பாடல்களை எழுதிய கவிஞர் விவேக் நேற்று ஒரு ட்வீட் போட்டுள்ளார்.

Advertisement

அந்த டீவீட்டில் “இன்னும் ஒன்று மீதம் உள்ளது( And there is one more)” என்று அவர் தெரிவித்துள்ளார்.

அதோடு இதுகுறித்த தகவல்கள் நாளை வெளிவரும் என அவர் நேற்று ட்விட்டரலில் சொல்லி இருக்கிறார். ஆக இன்று ஏதோ ஒரு அறிவிப்பு காத்திருக்கிறது என்பது மட்டும் தெளிவாக தெரிகிறது.

Advertisement

 

Advertisement

அவர் பாடலாசிரியர் என்பதால் அனேகமாக இன்று இன்னொரு பாடல் வெளியாகும் என்று ரசிகர்கள் எதிர் பார்க்கின்றனர். பொறுத்திருந்து பார்ப்போம் என்ன அறிவிப்பு என்று.

Advertisement