மறைந்த நடிகர் விஜயகாந்த் நினைவிடத்தில் டிடிஎப் வாசன் செய்து இருக்கும் செயல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. மக்கள் மத்தியில் என்றென்றும் கேப்டனாக திகழ்ந்தவர் விஜயகாந்த். இவர் நடிகர், அரசியல்வாதி என்பதை தாண்டி ஒரு நல்ல மனிதர் என்றே சொல்லலாம். ஏழை மக்கள், உதவி கேட்டு வருபவர்கள் என அனைவரையும் சமமாக பார்த்து அவர்களுக்கு உணவளித்து மகிழ்ந்தவர். வளரும் கலைஞர்களுக்கு வாய்ப்பளித்து உதவியவர்.

இப்படி பல உதவிகளை செய்த விஜயகாந்த் அவர்கள் கடந்த மாதம் உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளித்து இருந்தார்கள். இருந்தும் அவர் சிகிச்சை பலனின்றி காலமானார். விஜயகாந்த் மறைவு அவரின் குடும்பத்தை மட்டும் இல்லாமல் தமிழக மக்களையும் அதிகம் பாதித்து இருக்கிறது. அவர் மறைவிற்கு பல்வேறு அரசியல் பிரபலங்களும், திரை பிரபலங்களும் இரங்கல் தெரிவித்து இருந்தார்கள் .

Advertisement

விஜயகாந்த் மறைவு:

பின் விஜயகாந்தின் உடலுக்கு அரசு மரியாதை உடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. அதோடு பிரபலங்கள் பலர் விஜயகாந்தின் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொள்ள முடியாததால் அவருடைய நினைவிடத்திற்கு வந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் டிடிஎஃப் வாசன் தன்னுடைய பட குழுவினருடன் சேர்ந்து விஜயகாந்தின் நினைவிடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்தி இருக்கிறார். தற்போது இது தொடர்பான வீடியோ தான் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisement

மஞ்சள் வீரன் படக்குழு இரங்கல்:

Advertisement

அந்த வீடியோவில், மஞ்சள் வீரன் படத்தின் சார்பாக கேப்டன் விஜயகாந்த்துக்கு இரங்களை தெரிவித்துக் கொள்கிறோம். அவர் மாமனிதர். அவருடைய இழப்பு ரொம்ப கஷ்டமாக இருக்கிறது. புது முக இயக்குனர்கள், நடிகர்கள் எல்லாம் அறிமுகம் செய்து வைத்த ஆளுமை கொண்டவர். அவருடைய ஆளுமை யாருக்கும் வராது. அவருடைய இழப்பு அனைவருக்குமே கஷ்டமாக இருக்கிறது. மஞ்சள் வீரன் பட குழு சார்பாக நாங்கள் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம் என்று கூறியிருந்தார்.

டிடிஎஃப் வாசன் அளித்த பேட்டி:

இவரை அடுத்து படத்தின் கதாநாயகன் டிடிஎஃப் வாசன், விஜயகாந்த் சாரோட இழப்பு எங்கள் எல்லோருக்கும் கஷ்டமாக இருக்கிறது. உலகிலேயே சிறந்த தானம் அன்னதானம். அதை அவர் சிறப்பாக எல்லோருக்கும் செய்ததாக பலரும் கூறியிருக்கிறார்கள். அவரைப் போலவே நாமும் அந்த வழியை பின்பற்றுவோம். அவருடைய இறப்பு ரொம்ப கஷ்டமாக இருக்கிறது என்று கூறியிருந்தார். இதனை அடுத்து விஜயகாந்தின் நினைவிடத்திற்கு அஞ்சலி செலுத்த வந்த பொதுமக்கள் சிலர் டிடிஎஃப் வாசனை பார்த்தவுடன் செல்பி எடுத்து இருக்கிறார்கள்.

வைரலாகும் வீடியோ:

டிடிஎஃப் வாசனும் செல்பி எடுத்து ஆட்டோகிராப் எல்லாம் போட்டு தந்திருக்கிறார். இதனை அங்கு பார்த்த விஜயகாந்த் கட்சியின் தொண்டர், இது செல்பி எடுக்கும் இடமா? இங்கெல்லாம் இது செய்யாதீர்கள் என்று திட்டி அனைவரையும் அனுப்பி விட்டிருக்கிறார். தற்போது இது தொடர்பான வீடியோ இணையத்தில் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. இது குறித்து பலரும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.

Advertisement