மறைந்த நடிகர் சேதுராமின் மனைவி எமோஷனலாக குழந்தைகள் வளர்ப்பு குறித்து அளித்திருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. தமிழில் கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியான கண்ணா லட்டு தின்ன ஆசையா என்ற படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் சேதுராமன். இவர் சந்தானத்தின் நெருங்கிய நண்பர். சந்தானத்தின் மூலம் தான் இவர் திரைப்படத்தில் நடிகராக அறிமுகமானார்.

அதன் பின் இவர் கண்ணா லட்டு தின்ன ஆசையா, வாலிப ராஜா, சக்க போடு போடு ராஜா, 50/50 போன்ற படங்களில் கதாநாயகனாகவும் துணை கதாபாத்திரத்திலும் நடித்து இருந்தார். மேலும், சேதுராமன் அண்ணா பல்கலைக்கழகத்தில் சரும நிபுணர் எனப்படும் dermatology என்ற துறையில் மருத்துவ படிப்பை முடித்து இருந்தார். பின் கடந்த 2016ஆம் ஆண்டு சொந்தமாக ஒரு தோல் நோய் மருத்துவமனை ஒன்றை திறந்தார். இதில் சந்தானம், பாபிசிம்ஹா, நிதின் சத்யா வெங்கட்பிரபு என்று பல்வேறு பிரபலங்களும் கலந்து இருந்தார்கள்.

Advertisement

சேதுராமன் குறித்த தகவல்:

இதனைத்தொடர்ந்து கடந்த 2017 ஆம் ஆண்டு அண்ணா நகரில் தனது இரண்டாவது மருத்துவமனையையும் திறந்தார் சேதுராமன். இப்படி மருத்துவர் மற்றும் நடிகர் என்று இரண்டு துறையில் இருந்து வந்த டாக்டர் சேதுராமன் கடந்த 2016 ஆம் ஆண்டு உமா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு ,மகன் மற்றும் ஒரு மகள் இருக்கிறார்கள். இந்த நிலையில் 2020 ஆம் ஆண்டு மாரடைப்பால் நடிகர் சேதுராமன் இறந்து விட்டார். இவரின் இழப்பு ஒட்டுமொத்த திரையுலகம் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.

சேதுராமன் இறப்பு:

அதோடு இவரின் இழப்பால் சேதுராமன் குடும்பம் தான் பரிதவித்து இருந்தது. மேலும், சேதுராமன் இறப்பிற்கு பின் தன் இரண்டு பிள்ளைகளை உமா தான் கவனித்து வருகிறார். இந்த நிலையில் சமீபத்தில் உமா அவர்கள் பேட்டி ஒன்று அளித்திருக்கிறார். அதில் அவர், சேதுராமனுடன் நான் நான்காண்டுகள் வாழ்ந்திருக்கிறேன். ஒவ்வொரு நாளுமே எனக்கு நினைவுகள் தான். குழந்தை வளர்ப்பைப் பொறுத்தவரை நாங்கள் குழந்தைகளை இப்படித்தான் வளர்க்க வேண்டும் என்றெல்லாம் யோசிக்கவே கிடையாது.உமா சேதுராமன் பேட்டி:

Advertisement

அது தானாகவே எங்களுக்குள் இருந்தது. ஆனால், நாங்கள் ஒன்றை மட்டும் தான் நினைவில் வைத்திருந்தோம். குழந்தைகள், நாம் மிகவும் வசதியாக எந்தவித பிரச்சனைகளும் இல்லாமல் வாழ்கிறோம் என்று மட்டும் நினைத்து விடக்கூடாது. அவர்கள் வாழ்க்கையில் தோல்விகள் எல்லாம் சந்திக்க வேண்டும். அப்படிப்பட்ட சூழ்நிலைகளை அவர்கள் எதிர் கொண்டு வாழ வேண்டும். பின் எப்படிப்பட்ட சூழ்நிலைகள் வந்தாலும் அதனை அவர்கள் எதிர் கொண்டு முன்னோக்கி செல்ல வேண்டும். அதேபோல் தங்களை விட சிறியவர்கள், பெரியவர்கள், உறவினர்கள் ஆகியோருடைய வசதிகளை பார்த்து அவர்கள் பழகக் கூடாது என்பதை மட்டும் நாங்கள் நினைவில் வைத்திருந்தோம்.

Advertisement

குழந்தை வளர்ப்பு குறித்து சொன்னது:

அப்படித்தான் நான் குழந்தைகளை வளர்த்து வருகிறேன். பள்ளிக்கூடத்தில் கூட என்னிடம் ஆசிரியர், எப்படி உங்கள் குழந்தைகள் எல்லோரையும் வாங்க போங்க என்று பேசுகிறார்கள், ஆச்சரியமாக இருக்கிறது என்று சொல்வார்கள். அதற்கு அவர்கள், என்னுடைய அம்மா எங்களை வாங்க போங்க என்றுதான் அழைப்பார். அதனால் தான் நாங்களும் அப்படி இருக்கிறோம் என்று சொல்வார்கள். நாம் எப்படி நடந்து கொள்கிறோமோ அப்படிதான் நம் பிள்ளைகளும் நடக்கும் என்று பேசி இருந்தார்.

Advertisement