தன் கணவரை எண்ணி சேதுராமனின் மனைவி உருக்கமான பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். தமிழில் கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியான கண்ணா லட்டு தின்ன ஆசையா என்ற படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான நடிகரும் மருத்துவருமான சேது ராமன்கடந்த மார்ச் மாதம் 26ஆம் தேதி இரவு 8.45 மணிக்கு மாரடைப்பால் காலமான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சந்தானத்தின் நெருங்கிய நண்பரான இவர் சந்தானத்தின் மூலம் திரைப்படத்தில் நடிகராக அறிமுகமானார்.

கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்திற்கு பின்னர் வாலிப ராஜா, சக்க போடு போடு ராஜா, 50/50 போன்ற படங்களில் கதாநாயகனாகவும் துணை கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார் சேது ராமன். டாக்டர் சேதுராமன் அண்ணா பல்கலைக்கழகத்தில் சரும நிபுணர் எனப்படும் dermatology என்ற துறையில் மருத்துவ படிப்பை முடித்துள்ளார். மேலும், கடந்த 2016ஆம் ஆண்டு சொந்தமாக ஒரு தோல் நோய் மருத்துவமனை ஒன்றை திறந்தார்.

Advertisement

மருத்துவர் + நடிகர் :

இதில் சந்தானம் பாபிசிம்ஹா நிதின் சத்யா வெங்கட்பிரபு என்று பல்வேறு பிரபலங்களும் கலந்து கொண்டார்கள்.இதனைத்தொடர்ந்து கடந்த 2017 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 15 ஆம் தேதி அண்ணா நகரில் தனது இரண்டாவது மருத்துவமனையையும் திறந்தார் சேதுராமன்.மருத்துவர் மற்றும் நடிகர் என்று இரண்டு துறையில் இருந்து வந்த டாக்டர் சேதுராமன் கடந்த 2016 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 12 ஆம் தேதி உமா என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

மாரடைப்பால் மறைந்த சேதுராமன் :

இந்த நிலையில் கடந்த 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 26ஆம் தேதி இரவு 8.45 மணிக்கு மாரடைப்பால் காலமான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதே போல இந்த நிலையில் டாக்டர் சேதுராமன் கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறந்து விட்டார் என்ற ஒரு வதந்தியும் பரவியது. ஆனால், அவர் மாரடைப்பால் தான் காலமானார் என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்து இருந்தனர்.

Advertisement

சேதுவின் இரண்டாம் ஆண்டு நினைவு நாள் :

சேதுராமன் இறந்த போது அவரது மனைவி உமா கர்ப்பமாக இருந்தார். இந்த நிலையில் சேதுராமன் இறந்த 5 மாதத்தில் உமாவிற்கு ஆண் குழந்தை பிறந்தத. தன் கணவர் மீண்டும் வந்துவிட்டார் என்று மிகவும் உருக்கத்துடன் பதிவிட்டு இருந்தார். சேதுராமன் இறப்பிற்கு பின் தன் இரண்டு பிள்ளைகளை கவனித்து வருகிறார் உமா. சமீபத்தில் தான் சேதுராமனின் இரண்டாம் நினைவு நாள் கூட சென்றது.

Advertisement

கணவனை எண்ணி உமா :

இப்படி ஒரு நிலையில் சேதுராமன் பயன்படுத்திய வாசனை திரவியத்தை பயன்படுத்தி உருக்கமான பதிவு ஒன்றை போட்டுள்ள உமா ‘இன்று உணர்ச்சிகள் அதிகமாக இருந்தது. நீங்கள் என் அருகில் இருப்பதை என் மூளை ஒரு நிமிடம் உணர்ந்தது. என்னுள் உன்னை மட்டுமே உணரமுடியும் என்று உன்னைத் தேட ஆரம்பித்தேன். நீங்கள் இல்லாத என் வாழ்க்கையை நான் இன்னும் எண்ணிக் கொண்டிருக்கிறேன். உணர்ச்சியுடன் இருப்பது மனிதர்களுடன் விஷயங்களைத் தொடர்புபடுத்துகிறது. இந்த முறை உனது வாசனை திரவியம் தான் என்னை மீண்டும் உன்னிடம் அழைத்துச் சென்றது. வாழ்க்கை மிகவும் நிச்சயமற்றது. ஆனால் நாம் நிச்சயமாக அதை மதிப்புமிக்கதாக மாற்ற முடியும் என்று உருக்கமுடன் பதிவிட்டுள்ளார்.


Advertisement