உறியடி 2 படம் எப்படி இருக்கு.!ட்விட்டர் விமர்சனங்களை பார்த்துட்டு போங்க.!
சாதித் தலைவர்களின் மனதில் எப்போதும் கனன்றுகொண்டிருக்கும் அரசியல் வேட்கையையும் சுயநலத்தையும் தோலுரித்துக் கட்ட முயன்றிருக்கும் படம் ‘உறியடி’. 2016 ஆம் ஆண்டு வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பற்றது.
https://twitter.com/balajidtweets/status/1113863272632061952
இந்த படத்தின் முதல் பாகத்தில் 1999ன் ஆம் ஆண்டு நடக்கும் கதையில் அந்தக் காலத்துக்குரிய அடையாளங்களைத் துல்லியமாகக் கொண்டுவந்திருந்தனர். தாபாவின் உட்புறத் தோற்றம், பொறியியல் கல்லூரியின் சூழல், சாதித் தலைவர் களின் சிலைகளை வைத்து நடந்த கலவரங்கள், சாதிக் கணக்குகளால் உருவாகும் சீர்கேடுகள் எனப் பல அம்சங்கள் நம்பகத்தன்மையுடன் சித்தரிக்கபட்டது.
இந்த நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகம் இன்று (ஏப்ரல் 5) வெளியாகியுள்ளது. கெமிக்கல் இன்ஜினியரிங் படித்துவிட்டு விஜயகுமார் அவருடைய நண்பர் சுதாகர் மற்றும் ஒருவர் வேலை தேடி அலைகின்றனர். அப்போது சொந்த ஊரிலேயே கெமிக்கல் பேக்ட்ரி ஒன்றில் வேலைக்கு சேர்கின்றனர். அப்போது விஜயகுமார் நண்பர் ஒருவர் கெமிக்கல் தாக்கி உயிர் இறக்கின்றார்.
https://twitter.com/VinoDhanush0320/status/1113991841576185856
https://twitter.com/MmcManoj/status/1113995998693449728
https://twitter.com/TSKNaveen_surya/status/1114031759044173824
ஆனால், அதை ஒரு ஜாதி தலைவர் அரசியலாக்கி பணம் வாங்கிக்கொண்டு கம்பெனியை மீண்டும் துறக்க அனுமதி கொடுக்கின்றார். பின்னர் அவர்களை விஜயகுமார் எப்படி தடுத்தார்? கெமிக்கல் பேக்ட்ரியால் வந்த ஆபத்து என்ன என்பது தான் உறியடி 2 படத்தின் கதை. இந்த படத்திற்கு கிடைத்துள்ள ட்விட்டர் விமர்சனங்களை பற்றி பார்ப்போம்.