தமிழ் சினிமாவில் உள்ள நடிகைகள் எல்லாம் மலையாள மொழியில் இருந்து வந்தவர்கள் தான். மலையாள நடிகைகள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று விடுகின்றனர். அந்த வகையில் தனது முதல் படத்திலேயே ரசிங்கர்களை தன் பக்கம் சுண்டி இழுத்தவர் நடிகை மஞ்சிமா மோகன். கேரளாவில் உள்ள பாலக்காட்டை பூர்விகமாக கொண்டவர். நடிகை மஞ்சிமா மோகன் தந்தை ஒரு திரைப்பட ஒளிப்பதிவாளர் மற்றும் தாயார் ஒரு நடன கலைஞர் ஆவார். இவர் 1998 களில் மலையாள சினிமாக்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்தவர்.

Advertisement

இவர் மதுரமனோம்பர்கட்டு, சுந்தர புருஷன், தாண்டவம், படங்களில் குழந்தை நட்சத்திரமாக மலையாள திரைப்படங்களில் நடித்துள்ளார். இதனைத்தொடர்ந்து இவர் 2015 ஆம் ஆண்டு ஒரு வடக்கன் செல்பி என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர். அந்த படம் வெளியானதை தொடர்ந்து தான் மஞ்சுமா மோகனுக்கு தமிழில் கௌதம் மேனன் இயக்கத்தில், சிம்பு நடிப்பில் ‘அச்சம் என்பது மடமையடா’ படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

முதல் படத்திலேயே தமிழ் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார் மஞ்சிமா மோகன். அதற்குப் பின்னர் தமிழில் சில படங்களில் நடித்தார். தமிழில் நடிகை மஞ்சு மோகன் சத்திரியன், இப்படை வெல்லும், தேவராட்டம் என வரிசையாக சில படங்களில் மட்டும் தான் நடித்து வந்தார். பின் இவர் மலையாளம் ,தெலுங்கு ,தமிழ் என பல மொழி திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

Advertisement

சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் மஞ்சுமா அடிக்கடி தனது புகைப்படங்களை பதிவிடுவது வழக்கம். இந்த நிலையில் ரசிகர் ஒருவர் மஞ்சுமாவிடம், உங்களின் செக்ஸியான புகைப்படம் ஒன்றை அனுப்புங்கள் என்று கூறியுள்ளார். அதற்கு மஞ்சிமா, தனது சிறு வயது புகைப்படம் ஒன்றை அனுப்பி பல்ப் கொடுத்துள்ளார்.

Advertisement
Advertisement