விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அது இது எது, கலக்கப்போவது யாரு, ரியாலிட்டி ஷோக்கள் உள்ளிட்ட காமெடி நிகழ்ச்சிகளில் பங்கேற்று வந்த பிரபல காமெடியன் வடிவேல் பாலாஜி 10 sep 2020 அன்று திடீரென உடல் நலக் குறைவால் காலமானார். வடிவேல் பாலஜியின் திடீர் மரணம் சின்னத்திரை மற்றும் சினிமா துறையில் இருப்பவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்திய செய்தியாக இருந்தது. வடிவேல் பாலஜியின் மரணம் அவர் உடன் பணியாற்றிய அனைவரையும் சோகத்தில் ஆழ்தியது.

வடிவேல் பாலாஜி இறப்பதற்கு 15 நாட்களுக்கு முன்பு உடல்நலகுறைவு காரணமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அதற்குப் பிறகு அவர் வேறு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார் எனவும் கூறப்படுகிறது. ஸ்டோரக் வந்து இரண்டு கைகளும் செயல் இழந்த நிலையில் தான் அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருக்கிறார். அவர் சிகிச்சைக்கு பணம் இன்றி கஷ்டப்பட்டதாகவும் கூறப்படுகிறது. அதனால் அவரது குடும்பம் அதிகம் அவதிப்பட்டதாகவும் கூறப்படுகிறது.விஜய் டிவி பிரபலங்களும் கூட பலரும் சிகிச்சைக்கு உதவி செய்திருக்கிறார்கள்.

Advertisement

வடிவேல் பாலாஜி மரணம் :

அதன் பின் மூன்று மருத்துவமனைகளுக்கு இவர் மாற்றப்பட்டு உடல் மோசமாக நலிவனைந்துள்ளார். உடலில் உள்ள உறுப்புகள் வேலை செய்யாமல் அதன் பின் மூளையில் ரத்தக் கசிவு ஏற்பட்டு 10 sep 2020 அன்று மரணம் அடைந்தார். கொரோனா காரணமாக இவருக்கு சிகிச்சை முறையாக அளிக்கவில்லை சரியாக பெட் கிடைக்கவில்லை என்று கூறுகிறார்கள். வடிவேல் பாலாஜி மரணத்திற்கு முக்கிய காரணம் அவர்களுக்கு தேவையான நேரத்தில் அவரால் மருத்துவ சிகிச்சைக்கு பணம் கட்ட முடியவில்லை என்பது தான். கொரோனா காரணமாக டிவி நிகழ்ச்சி எதுவும் நடக்காத காரணத்தால் பொருளாதார ரீதியாக கஷ்டப்பட்டு இருக்கிறார்.

கணவனின் பாதையில் பயணிக்கும் மனைவி :

இப்படி ஒரு நிலையில் வடிவேல் பாலாஜியின் குடும்பம் மிகவும் கஷ்டப்பட்டு வருவதாக சமூக வலைதளத்தில் செய்திகள் பரவியது. ஆனால், பாலாஜியின் மனைவி தாங்கள் நலமாக உள்ளதாகவும். தங்களுக்கு உதவி தேவை இல்லை என்பதாகவும் தெரிவித்தார். இப்படி ஒரு நிலையில் சமீபத்தில் வடிவேல் பாலாஜியின் இரண்டாம் ஆண்டு நினைவு நாள் வந்திருந்தது. அப்போது விஜய் டிவி புகழ் உருக்கமான பதிவு ஒன்றை போட்டு இருந்தார்.

Advertisement

வடிவேல் பாலாஜி மனைவி அளித்த பேட்டி:

இதை பார்த்த ரசிகர்கள் பலர் அவருக்கு இரங்கல் தெரிவிப்பதற்கு பதிலாக அவரது குடும்பத்தினருக்கு எதாவது உதவி செய்யுங்கள் என்று கூறி வந்தனர். இப்படி ஒரு நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றை அவர் இருந்தவரை வாடகை வீட்டில் தான் இருந்தோம். ஆனால், அவர் இறந்த பின்னர் வாடகை கொடுக்க முடியாததால் விஜய் டிவி கொஞ்சம் பணம் கொடுத்து உதவினார்கள். அதை கொடுத்து அந்த வீட்டைலீசுக்கு எடுத்து வாழ்ந்து வருகிறோம். அவர் இறந்தபோது சிவகார்த்திகேயன் என் குழந்தைகளின் படிப்பு செலவை ஏற்றுக் கொள்வதாக சொன்னார். அதேபோல என் மகள் மற்றும் மகனை அவர் தான் இன்று வரை படிக்க வைத்து வருகிறார்.

Advertisement

உதவி செய்யும் நல் உள்ளங்கள் :

ஈரோடு மகேஷ் எங்களுக்கு மாத மாதம் அரிசி பருப்பு என்று தொடர்ந்து மளிகை சாமான் வாங்கி கொடுத்து வருகிறார் அதேபோல புகழ் எங்களை வந்து அடிக்கடி பார்த்துவிட்டு செல்கிறார் அவருடைய திருமணத்திற்கு கூட எங்களுக்கு புது துணிகள் எடுத்துக் கொடுத்து கூப்பிட்டார் பெயர் புகழ் இருந்தும் என்ன பயன் காசு பணத்தை சேர்த்து வைக்காமல் போய்விட்டார் என்று வீட்டில் எல்லோருக்கும் அவர் மீது ஒரு வருத்தம் இருந்தது ஆனால் இது போன்ற நல்ல மனிதர்களை அவர் சம்பாதித்து வைத்து விட்டு சென்றிருக்கிறார் என்பது கொஞ்சம் ஆறுதலாக இருக்கிறது இவர்கள் உதவி இல்லையென்றால் எங்கள் நிலைமை மிகவும் மோசமாக ஆகி இருக்கும் எங்களுக்கு உதவி செய்த அனைவருக்கும் மிகவும் நன்றி கடன் பட்டிருக்கிறேன்

Advertisement