வடிவேலு என்றாலே சிரிப்பு தான். எப்போதும் அவரது படங்களையோ காமெடியையோ பார்த்து மண நிம்மதி தேடுபவர்கள் ஏராளம். இன்றும் கூட ட்ரெண்ட் ஓயாமல், Shape Of You பாடலுக்கு வடிவேலுவின் காமெடிகள் மீம்ஸ்களாக வலம் வருகின்றன.
பல கஷ்டங்களுக்கும் இன்னல்களுக்கும் ஆளாகி பின்னர் தமிழ் சினிமாவின் காமெடி ஜாம்பவானாக உயர்ந்தவர். 2011 தமிழக சட்டசபை தேர்தலில் அவரது ஆப் த பீல்டுக காமெடியால் சற்று ஓரம் கட்டப்பட்டார்.

ஆனால், இன்றும் மக்களின் மனதில் அழியாத தலைவனாக உள்ளார். கடந்த சில வருடங்களுக்கு முன்னர் வடிவேலு தன் மகன் சுப்ரமணிக்கு திருமணம் செய்து வைத்தார். அவரது சொந்த ஊரில் எந்த ஒரு ஆடம்பரமும் இல்லாமல் உறவினர்களை மட்டும் வைத்து திருமணம் நடத்தினார்.சுப்ரமணிக்கு பார்த்த பெண் பெயர் புவனேஸ்வரி.

Advertisement

இவர் சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் ஊரைச் சேர்ந்தவர். அவருடைய அப்பா மரவேலை செய்யும் ஒரு கூலி தொழிலாளி. குடிசை வீட்டில் வசித்து வந்த அவருக்கு தன் மகன் மூலம் நல்ல வாழ்க்கை அமைத்து கொடுத்திருக்கார் நல்ல உள்ளம் கொண்ட வடிவேலு.பழையதை எப்போது மறக்க கூடாது எனும் ஒரு பண்பு வடிவேலுவிடம் இன்றும் உள்ளது.

Advertisement