வடிவேலுவை விமர்சித்து நடிகை ராதிகா பேசியிருக்கும் வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ்நாட்டில் கேப்டன் விஜயகாந்த் இறப்பு பலருக்கும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. கடந்த சில வாரமாகவே சோசியல் மீடியா முழுவதும் விஜயகாந்தின் இறப்பு குறித்த செய்தி தான். சில ஆண்டுகளாக விஜயகாந்த் உடல் நல குறைவின் காரணமாக சினிமா மற்றும் அரசியல் என இரண்டிலும் விலகி சிகிச்சை பெற்று இருந்தார். இப்படி ஒரு நிலையில் நடிகர் விஜயகாந்த் கடந்த மாதம் சிகிச்சை பலனின்றி காலமானார்.

மேலும், அவர் மறைவிற்கு பல்வேறு அரசியல் பிரபலங்களும், திரை பிரபலங்களும் இரங்கல் தெரிவித்து இருந்தார்கள் . விஜயகாந்த் உடல் சென்னை சாலிகிராமத்தில் உள்ள அவரது வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு இருந்தது. விஜயகாந்தின் உடல் அரசு மரியாதை உடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. விஜயகாந்தின் இறப்பு ஒட்டு மொத்த தமிழகத்தையும் புரட்டி போட்டு இருக்கிறது. அதோடு பிரபலங்கள் பலர் நேரடியாக வந்து விஜயகாந்த் உடலுக்கு அஞ்சலி செலுத்த முடியாத காரணத்தால் அவருடைய நினைவிடத்திற்கு வந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

Advertisement

விஜயகாந்த் இறப்பு:

அந்த வகையில் நடிகர் கார்த்தி, அவருடைய தந்தை சிவக்குமார், சூர்யா, செந்தில்-ராஜலக்ஷ்மி என பல பிரபலங்கள் விஜயகாந்த் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தி கண்ணீர் மல்க பேசி இருந்தார்கள். ஆனால், நடிகர் வடிவேலு மட்டும் இன்னும் வரவில்லை. அவர் இன்னமும் இரங்கல் கூட தெரிவிக்கவில்லை. இது குறித்து பலருமே கண்டனம் தெரிவித்து இருக்கிறார்கள். அதோடு பிரபலங்கள் கூட கேள்வி எழுப்பி இருக்கிறார்கள். அதிலும் பலர், வடிவேலு நன்றி கெட்டவர், மோசமான மனிதர் என்றெல்லாம் விமர்சித்து திட்டியும் வருகிறார்கள்.

வடிவேலு குறித்த விமர்சனம்:

சொல்லப்போனால், சோசியல் மீடியாவில் நடிகர் வடிவேலு குறித்து தான் விவாத பொருளாகவே மாற்றி விட்டார்கள். இதனால் கடந்த வாரம் வடிவேலுவின் நண்பர் ஒருவர், கூடிய விரைவில் விஜயகாந்தின் நினைவிடத்திற்கு வடிவேலு வந்து அஞ்சலி செலுத்துவார் என்று கூறியிருந்தார். ஆனால், வடிவேலு இன்னும் வரவில்லை. இப்படி இருக்கும் போது சில தினங்களுக்கு முன்பு நடந்த கலைஞரின் நூற்றாண்டு விழாவில் மட்டும் வடிவேலு பங்கேற்று இருந்தார். இதற்கு மட்டும் வர முடிகிறதா? என்றெல்லாம் கிண்டல் கேலி செய்திருந்தார்கள்.

Advertisement

ராதிகா பேசிய வீடியோ:

இப்படி விஜயகாந்தின் இறப்பிலிருந்து வடிவேலு குறித்த விமர்சனங்கள் சோசியல் மீடியாவில் வந்த வண்ணம் இருக்கிறது. அந்த வகையில் வடிவேலு குறித்து நடிகை ராதிகா பேசிருக்கும் பழைய வீடியோ தான் தற்போது ட்ரெண்டிங் ஆகி இருக்கிறது. அந்த வீடியோவில் ராதிகா, வடிவேலுவை பற்றி பேச நான் விரும்பவில்லை. அவர் ஏதோ காமெடி செய்து கொண்டு இருக்கிறார். நான் அவரைப் பார்த்து பல வருடங்கள் ஆகிவிட்டது. அவரை நான் ஒருமுறை ஏர்போட்டில் பார்த்தேன். என்னுடைய மகனுக்கு வடிவேல் என்றால் ரொம்ப பிடிக்கும். எனக்கும் வடிவேலுவை பிடிக்கும். அப்போது என் மகன் அவரிடம், நீங்கள் அப்பா படத்தில் நடிக்கிறீர்களா? என்று கேட்டதற்கு வடிவேலு அரசியல்வாதிகளுக்கு வாழ்க்கை கொடுப்பதில்லை என்று பேசி இருந்தார்.

Advertisement

வடிவேலு குறித்து சொன்னது:

காரணம், அரசியல்வாதிகள் நடிக்கும் படங்களில் நடித்தால் அவர்களுக்கு வாழ்க்கை கொடுத்த மாதிரியாம். இப்போது சரத்குமார் எங்கே இருக்கிறார்? வடிவேலு எங்கே இருக்கிறார் என்று உங்களுக்கே தெரியும். வடிவேலு நிலைமை என்ன? படங்கள் நடிக்க முடியாமல் வீட்டில் இருக்கிறார். எனக்கு ஏதாவது ஒரு பிரச்சனை என்றால் ஷூட்டிங் ஸ்பாட்டில் சரத்குமார் வந்து நிப்பார். அதேபோல் விஜயகாந்த், பிரபு என்று சில நடிகர்கள் பெண்களுக்கு ஏதாவது பிரச்சனை என்றால் முன் நின்று குரல் கொடுப்பார்கள். அதை நான் எல்லா மேடையிலும் தைரியமாக சொல்வேன் என்று கூறி இருக்கிறார்.

Advertisement