சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் தமிழ் சினிமாவில் ஒரு அசைக்கமுடியதா இடத்தில் இருந்து வருகிறார். சூப்பர் ஸ்டாரின் ஹிட் படங்களில் ‘அருணாச்சலம்’ படமும் ஒன்று இந்த படத்தில் சௌந்தர்யா, ரம்பா, ரகுவரன், வடிவுக்கரசி என்று பலர் நடித்திருந்தனர்.
இந்த படத்தில் ரஜினி முதல் பாதியில் ஒரு அனாதை என்பது தெரியவரும். அதனை வடிவுக்கரசி தான் ‘அனாத பயலே’ என்று கூறி ரஜினியை வீட்டை விட்டு வெளியே துரத்தி விடுவார். ரஜினியை அவ்வாறு பேசியதால் ரஜினி ரசிகர்கள் வடிவுக்கரசி மீது கடும் கோபமடைந்தார்களாம்.
இந்த நிலையில் ஒரு முறை வடிவுக்கரசி ரயிலில் பயணம் செய்த போது ரஜினி ரசிகர்கள் சிலர், அருணாச்சலம் படத்தில் ரஜினியை ‘அனாத பயலே’ என்று திட்டியதற்காக மன்னிப்பு கேட்க சொன்னார்களாம். இதனை சில ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு பேட்டி ஒன்றில் கூறியுள்ளார் வடிவுக்கரசி.