நம்ப முடியாத அளவு படு ஸ்லிம் & மாடர்ன் லுக்கில் வம்சம் சீரியல் நடிகை.

By Rajkumar · 6/6/2020

வம்சம் சீரியல் பூமிகாவை நினைவிருக்கிறதா? அவரை பற்றி தான் இங்கு பார்க்க போகிறோம். இவரின் முழுப் பெயர் சந்தியா ஜகர்லமுடி. சந்தியா 1985 ஏப்ரல் 15 ஆம் தேதி ஹைதராபாத்தில் பிறந்தார். சந்தியா தனது பள்ளிப்படிப்பை செயிண்ட் ஜோசப் பள்ளியில் படித்து முடித்தார். அதைத் தொடர்ந்து இவர் M.A ஆங்கில இலக்கியம், M.Sc உளவியல் ஆகிய முதுகலைப் பட்டங்களையும் பெற்று உள்ளார். செல்லமடி நீ எனக்கு என்ற சீரியல் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகமானார் சந்தியா. பின் சன் டிவி-யில் ஒளிபரப்பான அத்திப்பூக்கள் என்ற சீரியல் மூலம் மக்கள் மத்தியில் பரிச்சயமானவர் சந்தியா.

வம்சம் சீரியல் பூமிகாவை நினைவிருக்கிறதா? அவரை பற்றி தான் இங்கு பார்க்க போகிறோம். இவரின் முழுப் பெயர் சந்தியா ஜகர்லமுடி. சந்தியா 1985 ஏப்ரல் 15 ஆம் தேதி ஹைதராபாத்தில் பிறந்தார். சந்தியா தனது பள்ளிப்படிப்பை செயிண்ட் ஜோசப் பள்ளியில் படித்து முடித்தார். அதைத் தொடர்ந்து இவர் M.A ஆங்கில இலக்கியம், M.Sc உளவியல் ஆகிய முதுகலைப் பட்டங்களையும் பெற்று உள்ளார். செல்லமடி நீ எனக்கு என்ற சீரியல் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகமானார் சந்தியா. பின் சன் டிவி-யில் ஒளிபரப்பான அத்திப்பூக்கள் என்ற சீரியல் மூலம் மக்கள் மத்தியில் பரிச்சயமானவர் சந்தியா.

இதையும் பாருங்க : காசு கூட வேணாம் சும்மா எடுத்துட்டு போங்கன்னு சொன்ன அப்பயும் யாரும் வரல – விவசாயி செந்தில் பேட்டி.

அதன் பிறகு ரம்யா கிருஷ்ணன் நடித்த வம்சம் சீரியலில் பூமிகா என்ற கதாபாத்திரத்தில் நடித்தார் சந்தியா. இந்த சீரியலில் மலைவாழ் பெண் கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். தனது கணவரை மச்சான் மச்சான் என்று அழைத்து நடித்து இவர் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். அதோடு இவர் வம்சம் சீரியலில் ரம்யா கிருஷ்ணனுக்கு அடுத்ததாக மக்கள் மத்தியில் பிரபலமானார்.

https://www.instagram.com/p/CBDr8YChr1z/

அந்த அளவுக்கு வம்சம் சீரியல் சந்தியாவுக்கு பெயரும், புகழும் வாங்கிக் கொடுத்தது. இவர் தமிழ் மற்றும் தெலுங்கு தொலைக்காட்சி தொடர்களிலும், சில தெலுங்கு சினிமாவிலும் நடித்து வருகிறார். இவரின் சொந்த ஊர் ஹைதராபாத். ஆனால், இவர் சின்னத்திரையில் நடித்துக் கொண்டிருப்பதால் சென்னையில் வசித்து வருகிறார். நடிகை சந்தியா ஜகரலமுடிக்கு திருமணம் ஆனாலும் தொடர்ந்து நடித்து வருகிறார்.

இவர் நடிப்பின் மீது கொண்டுள்ள ஆர்வத்தால் தொடர்ந்து நடிக்கிறார். இவர் தன்னுடைய ஓய்வு நேரங்களில் நடனமாடுவது, பாட்டு பாடுவது என பல வேலைகளை செய்து வருகிறார். அதோடு தான் வளர்க்கும் செல்லப் பறவைகளுடன் நேரத்தை செலவிடுகிறார். அர்மபத்தில் கொழுக் முழுக் தோற்றத்தில் இருந்த சந்தியா தற்போது படு ஸ்லிம்மாக மாறியுள்ளார்.

அதற்கு காரணம் அவர் வளர்க்கும் செல்லப்பிராணிகள் தானாம். இதுகுறித்து பேட்டி ஒன்றில் பேசிய அவர், ர். என்னுடைய வீட்டுல பறவைகள், நாய், பூனைன்னு எல்லாமே இருக்கு. இதுங்களை நேசிக்கிற ஒருத்தரால எப்படி நான்–வெஜ் சாப்பிட முடியும்னு கொஞ்ச நாளாவே யோசிக்கத் துவங்கினேன். பின்னர் அசைவம் சாப்பிடுவதை முழுமையாக நிறுத்திவிட்டேன். தற்போது முட்டை கூட சாப்பிடுவது இல்லை என்று கூறியுள்ளார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full